
"யார் நீங்கள் எல்லாம்? எப்படி பேசுகிறீர்கள்? நான் எப்படி இங்கு வந்தேன்?" என்று கெஞ்சலாகக் கேட்டேன்!
தொடர்ந்து வாசிக்க... Comments (2)

"யார் நீங்கள் எல்லாம்? எப்படி பேசுகிறீர்கள்? நான் எப்படி இங்கு வந்தேன்?" என்று கெஞ்சலாகக் கேட்டேன்!
செல்ஃபோன் சிணுங்கியது. ரிங்டோன் பறவைச் சத்தம் வைத்திருந்ததால் அந்தச் சூழலுக்கு இயற்கையான சப்தம் போல் கேட்டது,பாக்கெட்டிலிருந்த போனைத் தேடினால் மரத்திலிருந்த ஒரு குரங்கு வைத்திருந்தது.ரிங்டோனைக் கேட்டதும் என்ன நினைத்ததோ,செல்போனை ரெண்டு தட்டு தட்டியது.ரிங்டோன் ஒலிப்பது தொடரவே அதைக் கடித்தது. போன் தன் முனகலை நிறுத்தியது.
சூரிய வெளிச்சம் கண்ணைக்கூசியது. விழித்துப்பார்த்தால் என்னைச் சுற்றிலும் காட்டுமிருகங்களும் பறவைகளும் அமர்ந்திருந்தன. ஏதோ நினைப்பில் மீண்டும் கண்களை மெல்லமூடிவிட்டு தூங்க நினைத்தபோது திடுக்கிட்டு மீண்டும் விழிப்பு வந்தது! அதே காட்சிகள்!
Page 1 of 2