முடிவுக்கு வந்ததா தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Share this News:

மும்பை (16 ஜன 2020): பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த வருட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இடம்பெற்ற தோனிக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 5 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி, என எந்தப் பிரிவிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தொடர்ந்து ஓய்வில் உள்ளார் தோனி. கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். எனினும் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சார்பாக தோனி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply