காயமடைந்த பறவையை காப்பாற்றிய தோனி – தோனியின் மகளின் நெகிழ வைக்கும் பதிவு!

Share this News:

ராஞ்சி (09 ஜூன் 2020): காயமடைந்த அழகிய பறவை ஒன்றை தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி காப்பாற்றி மீண்டும் அதனை பறக்கவிட்ட தகவலை தோனியின் மகள் ஜிவா சமூக வலைதலத்தில் பதிவாக இட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

தோனியின் மகள் ஷிவா செவ்வாயன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘பாப்பா’ மற்றும் ‘மம்மா’ ‘காயமடைந்து மயக்கத்தில் கிடந்த ஒரு பறவையை காப்பாற்றி எங்கள் வீட்டில் வைத்து அது சரியானதும் மீண்டும் பறக்கவிட்டார்.

‘காயமடைந்த பறவை புல்வெளியின் மீது தடுமாறியபடி இருந்தது, பறவை மீண்டும் பறக்க உதவிய தனது தந்தை எம்.எஸ். தோனி மற்றும் தாய் சாக்ஷி’ என்று ஜிவா தெரிவித்துள்ளார்.

மேலும் ஜிவாவின் பதிவில், தோனி மீண்டும் சுயநினைவைப் பெற்ற பறவையை வைத்திருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பறவை எங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும், ஆனால் அது மயக்கம் தெளிந்த பிறகு மீண்டும் பறந்து சென்றதாகவும் ஜிவா தெரிவித்துள்ளார்.

மேலும் “நாங்கள் அந்த பறவையை சில இலைகளின் மேல் வைத்தோம். என்ன ஒரு அழகான, அழகான சிறிய பறவை. பின்னர் திடீரென்று அது பறந்து சென்றது, அது எங்களுடன் தங்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் என் மம்மா அந்த பறவை அதன் அம்மாவிடம் செல்ல விரும்புவதாக என்னிடம் சொன்னாள். நான் அதனை மீண்டும் பார்ப்பேன் என்று நான் நம்புகிறேன்! ” என்று ஜிவா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Share this News: