கொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!

Share this News:

பெஷாவர் (15 ஏப் 2020): கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் சர்ஃபராஸ் (50) உயிரிழந்தார்.

கொரோனா தொற்று காரணமாக ஜாஃபர் சர்ஃபராஸ் கடந்த 3 நாட்களாக பெஷாவரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கிரிகெட் வீரர் சர்ஃபராஸ். இவர் 1988 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும் பெஷாவருக்காக 15 முதல் தர ஆட்டங்கள் விளையாடி 616 ஓட்டங்கள் எடுத்தார்.

1994ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு ஆறு ஒருநாள் ஆட்டங்களில் 96 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது. பின்னர் அவர் 2000ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் மூத்த மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெஷாவர் அணிகளைப் பயிற்றுவிக்கும் பணியை ஏற்றுக்கொண்டார்.

ஜாஃபர் சர்ஃபராசின் சகோதரர் அக்தார் சர்ஃபராஸ், பெருங்குடல் புற்றுநோய் காரணமாக, 10 மாதங்களுக்கு முன்பு காலமானார்.

பாகிஸ்தானில் மொத்தம் 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் பெஷாவர் பகுதியில் மட்டும் 744 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சுமார் 100 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply