இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு விளையாட்டு செய்திகள் இந்திய அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை - கங்குலி!

இந்திய அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை - கங்குலி!

இந்திய அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை - கங்குலி!இந்திய கிரிக்கெட் அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, டெஸ்ட், 20/20, ஒருநாள் ஆட்டங்கள் என தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய அணி கேப்டன் டோனிமீது பலமான விமர்சனங்கள் ஆங்காங்கே எழத்துவங்கிள்ளன.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

"ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட்டுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும். டெஸ்ட், 20/20 மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்கும் நேரம் தேர்வாளர்களுக்கு வந்து விட்டது. தற்போதைய காலத்தில் நிறைய சர்வதேச போட்டிகள் விளையாடப்படுகின்றன. எனவே தனித்தனி கேப்டன்கள் அவசியம்.

11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக எந்த அணிக்கும் கிடைக்காது. ஆஸ்திரேலிய அணி கூட 11 சிறந்த பீல்டர்களை பெற்றிருக்கவில்லை. பீல்டிங் ரொம்ப முக்கியம். அதே சமயம் கடினமான சூழலில் ரன்கள் குவிப்பதும் மிகவும் முக்கியம்." என்று கூறியுள்ளார்.

Comments  

 
+2 # Jerry 2012-02-23 01:09
ganguly must stop his nonsense ideas and just need to take care of his future!!! we all know how he captained the team! and what happened to him with chappel and bukanan!!! team India never had a captain like dhony!!! if some one should be sacked from the team then that should be sachin and sewag!!!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Mohamed 2012-02-23 11:25
this team which we have now thats from ganguly's hard work. he selected the young players and gave chance to those young guns.thatswhy only india now having a good team and players. so stop blame the ganguly's statement.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: