ஜெயலலிதா இல்லம் குறித்து அதிமுக மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி!

சென்னை (15 டிச 2021): ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா,…

மேலும்...

அதிமுக மீது ராமதாஸ் பாய்ச்சல்!

தருமபுரி (12 டிச 2021): தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை தலைவரும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது: பெரும்பாலான சமுதாயங்கள் இடஒதுக்கீடு வந்தது தவறு என கூறி உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெற முயற்சி மேற்கொள்கின்றன. ஆனால் தற்போதைய திமுக…

மேலும்...

சசிகலா எச்சரிக்கை!

சென்னை (05 டிச 2021): அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும் ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்…

மேலும்...

அதிமுகவில் திடீர் பரபரப்பு – காரணம் இதுதான்!

சென்னை (01 டிச 2021): அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போதைய அதிமுக தலைமையாக உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து எதிரான கருத்துக்களை அன்வர்ராஜா தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் எதிரான வகையில் செயல்பட்டதால் அன்வர்ராஜா நீக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்….

மேலும்...

சட்டசபையில் தன்னைதானே நொந்துகொண்ட ஓ.பி.எஸ்!

சென்னை (28 ஆக 2021): சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னை தானே நொந்து கொண்டார். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக அரசு விவாதித்ததா? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது எழுந்த…

மேலும்...

முன்னாள் அமைச்சரின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்கள் முடக்கம்!

சென்னை (12 ஆக 2021): முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வாங்கிக் கணக்கு மற்றும் லாக்கர் முடக்கபப்ட்டுள்ளன. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய சகோதரர்களான அன்பரசன், செந்தில்குமார், மற்றும்…

மேலும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு உட்பட 55 இடங்களில் அதிரடி ரெய்டு!

சென்னை (10 ஆக 2021): அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உட்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.2 கோடி மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி.வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில்…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் அடைக்கலம்!

சென்னை (09 ஆக 2021); கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. சிவகாசி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மேலும், திமுகவை தரக்குறைவாகவும் பாஜகவின் அமைச்சர் போன்றே மோடியை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசிவந்த அவர், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மிக அமைதியானார். தான் முன்னர் பேசியதற்கு கூட வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், அங்கேயே தங்கியுள்ளார். இதற்கிடையே, அவர் பாஜகவில்…

மேலும்...

சிறுபான்மை வாக்குகளை இழந்ததால் தோல்வி – பாஜக மீது அதிமுக சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை (07 ஜூலை 2021): “பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதிமுக மீது பாஜகவும் கடும் விமர்சனம் வைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக ஆட்சி வர வேண்டும்…

மேலும்...

மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சென்னை (30 ஜூன் 2021): கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் தனிமை படுத்தலில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் படி தனிமைப்படுத்தி உள்ளேன். ஆகவே அடுத்த பதினைந்து தினங்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை…

மேலும்...