அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு!

புதுடெல்லி (29 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். டெல்லியில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டிசம்பர் 3 ம் தேதி விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு தெரிவித்திருந்தார். புராடியில் உள்ள சமரவேதிக்கு போராட்ட இடத்தை மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால்…

மேலும்...

அமித்ஷாவின் புகைப்படம் நீக்கம் ஏன்? – ட்விட்டர் விளக்கம்!

புதுடெல்லி (13 நவ 2020): மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவர புகைப்படத்தை ட்விட்டர் திடீரென நீக்கியது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமித் ஷாவின் ட்விட்டர் கணக்கில் சுயவிவர படம் நேற்று திடீரென ட்விட்டரால் அகற்றப்பட்டது. ட்விட்டரின் நடவடிக்கை பதிப்புரிமை மீறலை அடிப்படையாகக் கொண்டது. என்பதாக ட்விட்டர் அப்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில் ‘கவனக்குறைவான பிழை காரணமாக, எங்கள் உலகளாவிய பதிப்புரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக அமித் ஷாவின் ட்விட்டர்…

மேலும்...

அமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்!

சென்னை (27 அக் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு: மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் வணக்கம். பொருள்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள்…

மேலும்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா மீண்டும் அனுமதி!

புதுடெல்லி(13 செப் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அமித்ஷா, கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமித்ஷா மேலும் சில நாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

கொரோனா வைரஸ் – அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (18 ஆக 2020): கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அமித் ஷாவுக்கு மீண்டும்…

மேலும்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதிவில் “கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளைப் அறிந்தவுடன், நான் சோதனை செய்து கொண்டபோது அதில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்...
Delhi_Riots

தில்லி கலவரம், பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களே காரணம்! தில்லி உண்மையறியும் குழு அறிக்கை!

தில்லி (19 ஜூலை,2020):கடந்த பிப்ரவரி மாதம் தில்லி-யின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் கலவரங்கள் குறித்து தில்லி மைனாரிட்டி கமிஷன் அமைத்த உண்மை அறியும் குழு, அந்தக் கலவரத்துக்கான முழுமூல காரணங்களாக பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களை ஆதாரங்களுடன் முன்னிறுத்தியிருக்கின்றது. மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட CAA_NRC_NPR உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை, அமைதியான முறையில் எதிர்க்கும் வகையில் தில்லி-யில் ஷாஹீன் பாக் அறப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பா.ஜ.க. தலைவர்களோ,…

மேலும்...

மோடி, அமித்ஷா நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் – காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜூன் 2020): சீனப்படைகளின் இந்திய ஆக்கிரமிப்பு, மற்றும் கொரோனாவை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை திசை திருப்பவே மோடி அரசு என்னிடம் அமலாக்கத்துறை விசாரணையை ஏவி விட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடி மற்றும் அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். என்றும் அஹமது பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக வைத்து செயல்பட்டு வரும், ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற மருந்து…

மேலும்...

அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பிய நான்கு இளைஞர்கள் கைது!

அகமதாபாத் (10 மே 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நான்கு இளைஞர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சனிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஷாவின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளதாக சிறப்பு போலீஸ் கமிஷனர்…

மேலும்...

நான் நலமுடன் உள்ளேன் – வதந்திகளுக்கு அமித் ஷா முற்றுபுள்ளி!

புதுடெல்லி (09 மே 2020): தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பல்வேறு அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அமித் ஷா சோர்வாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான புகைப்படங்களைக் கொண்டு, அமித் ஷா எதிர்ப்பாளர்கள் அவருக்கு நோய் ஏற்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத…

மேலும்...