அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி…

மேலும்...

போர்களத்துக்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எப்படி உக்ரைனில் இருந்து வாஷிங்டனுக்கு வந்தார்?

வாஷிங்டன் (23 டிச 2022): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டிசம்பர் 21-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை சந்திப்பதே இதன் நோக்கமாகும். ஆனால் ரஷ்ய அச்சுறுத்தல் உள்ள உக்ரேனிய விமானப் பாதை வழியாக ஜெலென்ஸ்கி எப்படி அமெரிக்காவிற்கு வந்தார்? பல மாதங்களாக, ஜெலென்ஸ்கியின் இந்தப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அது கைகூடாமல் இருந்தது. எனினும் டிசம்பர் 11-ம் தேதி அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைத்தவுடன், பயணத்திற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. ஜெலென்ஸ்கி உக்ரைனில் இருந்து…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

சியாட்டில் (21 பிப் 2022): கர்நாடகாவில் சர்ச்சையை கிளம்பியுள்ள ஹிஜாப் தடை விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சியாட்டில், டெக்சாஸ், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க் மாநிலம், நியூ ஜெர்சி, புளோரிடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடகாவில் உள்ள ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் ஹிஜாப்…

மேலும்...

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!

நியூயார்க் (30 ஜன 2022): அமெரிக்காவில் பெய்துவரும் பனிப்புயலையொட்டி அங்குள்ள சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 1,17,000 வீடுகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனியை அகற்றும்…

மேலும்...

மோடிக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன் (25 செப் 2021):  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் உள்ள பூங்காவான லாஃபாயெட் சதுக்கத்தில் டஜன் கணக்கான இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து மோடி பேச்சுவர்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. “இந்தியாவை பாசிசத்திலிருந்து காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மனித உரிமை மீறல்கள்,…

மேலும்...

தாலிபான்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டனர்: அமெரிக்கா

நியூயார்க் (10 செப் 2021): அமெரிக்க மற்றும் கூட்டுப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறிய பின்னர் முதல்முறையாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க உள்ளிட்ட பிற நாடுகளின் குடியுரிமை பெற்ற 113 பேர் கத்தர் வந்தடைந்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் குழு செயலாளர், அமெரிக்க குடியுரிமை மற்றும் நீண்ட கால அமெரிக்க விசா வைத்திருப்போர் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வர அமெரிக்க அரசு கத்தர் நாட்டுடன் இணைந்து முயற்சி செய்தது. தாலிபான்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பயணிகள்…

மேலும்...

ஆப்கான் ஐ எஸ் ஐ எஸ் தளங்கள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

காபூல் (28 ஆக 2021): காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா . நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஐஎஸ்கே தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை இரவு காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…

மேலும்...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

அலாஸ்கா (29 ஜூலை 2021): அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் முதற்கட்ட தகவல்களின்படி, அலாஸ்காவின் சில பகுதிகள் கடற்கரையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 56 மைல் (91 கிலோமீட்டர்) தொலைவில் , உள்ளூர் நேரம் இரவு 10:15 மணியளவில் இந்த நிலநடுக்கம்…

மேலும்...

கொளுத்தி எடுத்த வெயிலால் 95 பேர் பலி!

நியூயார்க் (05 ஜூலை 2021): அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இவற்றில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாகாண கவர்னர் கேட் பிரவுன் கூறும்போது, வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்திருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது. நாங்கள் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப தயார்படுத்தி கொள்ள பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அனல் காற்று…

மேலும்...

மாஸ்க் தேவையில்லை – குறையும் கொரோனா – சாதித்த அரசு!

நியூயார்க் (23 மே 2021):கொரோனா பரவல் தொடர்ந்து குறைவதால் அமெரிக்கா கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உலகிலேயே கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. அமெரிக்காவில் தற்போது வரை 3.38 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன ஆனால்…

மேலும்...