மத்திய அரசு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

புதுடெல்லி (01 பிப் 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும். 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும். மத்திய அரசின் கடன் 52%ல் இருந்து தற்போது 48.7% ஆகக்…

மேலும்...

இந்தியாவில் கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

திருவனநதபுரம் (30 ஜன 2020): கேரள மாநிலத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில். சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹானிலிருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காதாம்!

புதுடெல்லி (30 ஜன 2020): கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்துள்ள சீனாவில் இருந்து விமானம் மூலம் அதிக பயணிகள் வரும் நாடுகளின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து, கரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சௌதாம்டன் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் இந்த பட்டியலில், கரோனா வைரஸ் பரவும் ஆபத்து நிறைந்த நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 23வது இடத்தில்…

மேலும்...

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

புதுடெல்லி (29 ஜன 2020): தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தத் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள்…

மேலும்...

தொடரும் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் – இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

புதுடெல்லி (28 ஜன 2020): கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகிக் கொண்டுள்ள நிலையில் சீன நகரமான வூஹானில் இருந்து 250 க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய்…

மேலும்...

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு!

புதுடெல்லி (28 ஜன 2020): இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வேடித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இநிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை பெறும் அகதிகள் தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது குறித்த சான்றிதழ், விண்ணப்பங்களுடன் இணைப்பது கட்டாயம் என டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

மேலும்...

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்தாயிரம் மசூதிகளில் பறந்த தேசிய கொடி!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப் பட்டது. காலை டெல்லி ராஜபாதையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போா் நினைவிடத்தில்…

மேலும்...

குடியரசு தினத்தில் பயங்கரம் – ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு!

கவுஹாத்தி (26 ஜன 2020): இந்தியாவின் குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அஸ்ஸாமின் திபுர்காரில் 2 இடங்களிலும், சோனரி, துலியாஜன் மற்ரும் தூம்தூமா ஆகிய இடங்களிலும் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநில போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கண்டன பதிவில், “குண்டு வெடிப்புச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் தீவிரவாதக் குழுக்களை…

மேலும்...

ஐரோப்பிய நாடுகளின் 154 சட்ட வல்லுநர்கள் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு கடும் கண்டனம்!

புதுடெல்லி (25 ஜன 2020): ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தலைச்சிறந்த 154 சட்ட வல்லுனர்கள் ஒன்றினைந்து இந்தியாவின் நீதிக்கு புறம்பான CAA – குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களான இவர்கள், இந்த குடியுரிமை சட்டத் திருத்ததை “பாரபட்சமானது மற்றும் ஆபத்தான பிரிவினை ஏற்படுத்துவது” என்று எச்சரித்துள்ளார்கள். இன்னும் சில தினங்களில் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் முழுமையான ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில்…

மேலும்...

குடியரசு தினத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

ஐதராபாத் (24 ஜன 2020): ஐதராபாத்தில் குடியரசு தினத்தன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று அசாதுத்தீன் உவைசி தலைமையிலான United Muslim Action Committee (UMAC) சார்பில் ஐதராபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஹ்திஜாஜி முஷைரா (Ehtejaji Mushaira) மைதானத்தில்…

மேலும்...