இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு!

மும்பை (24 ஜன 2020): இந்தியாவில் இருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால், அவர்கள் இங்கு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால்…

மேலும்...

சிறுவனுடன் சல்லாபம் – ஆசிரியை கைது!

நியூயார்க் (24 ஜன 2020): அமெரிக்காவில், 13 வயது சிறுவனுக்கு, நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி, அவனிடம் காதல் கொண்ட, இந்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஹெப்சிபாவை சேர்ந்தவர் ரூமா பைராபாகா, 24. இந்தியரான இவர், ஹெப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது வகுப்பில் படிக்கும், 13 வயது சிறுவனுக்கும் அந்த ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது. மேலும் அந்த சிறுவனுக்கு மொபைல் மூலம் ஆபாச படங்களை அனுப்பி,…

மேலும்...

அமித் ஷா உள்ளிட்ட எம்பிக்களின் சொத்து விவரம் எங்கே? – தகவல்அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி!

புதுடெல்லி (24 ஜன 2020): உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 எம்பிக்கள் இதுவரை சொத்து விவபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், 90 நாட்களுக்குள் தங்களது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து, வாழ்க்கைத்துணையின் சொத்து விவரங்கள், தங்களுடன் இருக்கும் பிள்ளைகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 2019ம் ஆண்டு…

மேலும்...

உறைந்து போயிருக்கும் உலக மக்கள் – சிகிச்சை அளிப்போரையும் தாக்கும் அபாய சங்கு!

சீனா ஏதாவது ஒரு வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுக் கொண்டே உள்ளது. முன்பு சார்ஸ் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இருபது நாள்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஜனவரி 1 அன்று, சீனாவின் உஹான் நகரில் 61 வயதான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக, பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்….

மேலும்...

ஷார்ஜாவில் தவற விட்ட மொபைல் போன் இந்தியாவில் கிடைத்த அதிசயம்!

ஷார்ஜா (23 ஜன 2020): ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பெண் ஷார்ஜா விமான நிலையத்தில் அவரது மொபைல் போனை தவற விட்டுவிட்டார். இந்தியாவுக்கு சென்ற அந்த பெண் அங்கு அவரது ட்விட்டரில் அவரது போனின் புகைப்படத்தை பதிவிட்டு காணாமல் போனது பற்றி தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஷார்ஜா விமான நிலைய போலீசுக்கு கிடைத்தது. உடனே ஷார்ஜா போலீஸ் விமான நிலையத்தில் போனை தேடி கண்டுபிடித்து. உடனே உரியவரிடம் ஒப்படைக்கும் வகையில் ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்….

மேலும்...

அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்து!

நியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம்…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்!

புதுடெல்லி (21 ஜன 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக்…

மேலும்...

இந்தியாவில் தொழில் நடத்த அச்சமாக உள்ளது – டாட்டா சன்ஸ் நிறுவனம் பகீர் தகவல்!

மும்பை (20 ஜன 2020): இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு அச்சமாக உள்ளது என்று டாட்டா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். என்று தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டம் குறித்து வங்கதேச பிரதமர் பதில்!

துபாய் (19 ஜன2020): இந்திய குடியுரிமை சட்டம் உள் நாட்டு விவகாரம் ஆனால் அது இப்போதைக்கு தேவையில்லாதது என்று வங்க தேச பிரதமர் சேக் ஹசீனா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேக் ஹசீனா, சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தால் வங்கதேசத்துக்கு எந்த பிரச்னையும் வராது என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அசாம் மாநிலத்தில், என்ஆர்சி கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும்,…

மேலும்...

இந்தியா அபாரம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதித்தது!

பெங்களூரு (19 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை….

மேலும்...