நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு! – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

லக்னோ (13 பிப் 2020): உத்திர பிரதேசம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 வெடி குண்டுகளைக் கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால்…

மேலும்...

முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதை – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

லக்னோ (13 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக பொய் கூறி உபி சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்திர பிரதேசத்தில் நடந்தபோது, போலீசார் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் முதலில் அதனை மறுத்தனர் பின்பு ஒத்துக் கொண்டனர். இந்நிலையில் உண்மையில்…

மேலும்...

இளம் பெண்ணை ஆசிரமத்தில் வைத்து வன்புணர்வு செய்த சாமியார் கைது!

பிரயாக்ராஜ் (13 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவ் குமார் ராய் என்கிற சஞ்சீவ் மஹாராஜ் என்ற சாமியார் அவரது ஆசிரமத்திற்கு பூ கொண்டு சென்ற 14 வயது இளம் பெண்ணை பிரசாதம் தருவதாகக் கூறி ஏமாற்றி ஆசிரமத்தின் உள்ளே அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் முயற்சித்தும் முடியவில்லை என அவரது தாயிடம் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி…

மேலும்...

ஹோட்டலில் அடைத்து வைத்து வன்புணர்வு – பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்!

லக்னோ (12 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ள புகாரில், “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி…

மேலும்...

கொடூரத்தின் உச்சம் – 3 வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை!

லக்னோ (12 பிப் 2020): உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹோலி பகுதியில் 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பெற்றோர்கள், உறவினர்கள் காணாமல் போன குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் உடல் அருகில் உள்ள பகுதியில் ஒரு சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார் அதிர…

மேலும்...

பட்டும் திருந்தாத பாஜக – பர்தாவுக்கு (புர்கா) தடை விதிக்க பாஜக அமைச்சர் கோரிக்கை!

லக்னோ (11 பிப் 2020): உத்திர பிரதேச பாஜக அமைச்சர் ரகுராஜ்சிங் இந்தியாவில் பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பிரதமர் மோடி ஒரு பக்கம் நான் முஸ்லிம் பெண்களின் சகோதரன் என்று பொய் சொல்வார் இன்னொரு பக்கம் அவரது அமைச்சர் சகாக்கள். மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளன.அதிலும் மக்கள் பிரிதிநிதிகளான எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் அதிகமாக விஷ கருத்துக்களை கக்குகின்றனர். அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலத்தில்…

மேலும்...

இந்து தலைவர் படுகொலையில் திடீர் திருப்பம்!

லக்னோ (07 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜிதேந்திரா என்ற ரஞ்சித் பச்சனின் மனைவியின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்….

மேலும்...

இந்து தலைவர் கொலைக்கு காரணம் மனைவியின் கள்ளத் தொடர்பு -பரபரப்பு தகவல்!

லக்னோ (06 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மனைவியின் கள்ளத் தொடர்புதான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம்…

மேலும்...

மனைவி அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம்!

மீரட் (05 பிப் 2020): மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம் உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஆரிப் என்பவருக்கும், ரோஷ்னி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரிப்பை விட ரோஷ்ணி மிகவும் அழகாக இருப்பார். மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் ஆரிபிற்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் சந்தேக தீயாக மாறி, தன் மனைவியின் அழகை…

மேலும்...

விஸ்வ இந்து மஹாசபா தலைவர் சுட்டுக் கொலை!

லக்னோ (02 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் இன்று(ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், இருவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவத்சவா கையில் பலத்த காயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

மேலும்...