மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாட முடிவு!

லக்னோ (25 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநில மதரசாக்களில் வகுப்புகள் தொடங்கு முன்பு தேசிய கீதம் பாட மதரசா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யவும், மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மே 14 மற்றும் மே 27 க்கு இடையில் நடைபெறும் ஆறு பாடங்களுக்கான தேர்வுகளை மதரசா வாரியம் நடத்தும் என்றும்…

மேலும்...

முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை…

மேலும்...

மாடு கடத்தியதாக வதந்தி – முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

லக்னோ (22 மார்ச் 2022): உத்தரப் பிரதேசத்தில், மாடு கடத்தியதாகக் கூறி, பசுக் குண்டர்களால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். விலங்குகளின் கழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுநராக 35 வயது அமீர் என்பவர் மீது பசு குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

எம்.எல்.சி தேர்தலில் டாக்டர் கஃபீல்கான் போட்டி!

லக்னோ (16 மார்ச் 2022): வரவிருக்கும் உத்தரப்பிரதேச எம்எல்சி தேர்தலில் தியோரியா-குஷிநகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி டாக்டர் கஃபீல்கானை வேட்பாளராக நிறுத்துகிறது. இதனை சமாஜவாதி கட்சியின் தேசியச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த கஃபீல் கான், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை ட்வீட் செய்து இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 8 சதவீத முஸ்லீம் வாக்குகளை பெற்ற பாஜக!

லக்னோ (13 மார்ச் 2022): நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது எட்டு சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் எதிராக வாக்களிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. CSDS-லோக்நிதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 20 சதவீத முஸ்லிம் வாக்குகளில் சமாஜ்வாடி கட்சி சுமார் 79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும், குறைந்தது 8 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது எனவும், இது 2017ஆம் ஆண்டை விட ஒரு…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை!

அலிகார் (13 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு முக்கிய கல்லூரியில் “பரிந்துரைக்கப்பட்ட சீருடை” அணியாமல் வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய ‘தடை’ அறிவிக்கப் பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்களை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. அலிகார் ஸ்ரீ வர்ஷ்னி கல்லூரியில் சனிக்கிழமையன்று வகுப்பிற்குச் செல்லும் போது மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கல்லூரி நிராகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பல மாணவிகள் வகுப்பிற்குச் செல்லாமல் வீடு திரும்பினர். இதுகுறித்து B.Sc. இறுதியாண்டு…

மேலும்...
Sonia Gandhi

இறங்கி வருமா காங்கிரஸ் தலைமை? – கொந்தளிக்கும் தலைவர்கள்!

புதுடெல்லி (11 மார்ச் 2022): ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது. உள்கட்சிக்குள்ளும் எதிர்க்குரல்கள் எழ தொடங்கியுள்ளன. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்த நிலையில் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. தற்போது 2 மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இரண்டு மக்களவைத் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்….

மேலும்...

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட தொகுதியில் பாஜகவினர் வெற்றி பெற்றது எப்படி?

நொய்டா (11 மார்ச் 2022): மக்களால் பாஜகவினர் விரட்டியடிக்கப் பட்ட நிலையில் அதே தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நொய்டா தொகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நிறுத்தப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் மூத்த அமைச்சர் மகன் என்பதால் இவரது…

மேலும்...

கடுமையாக உழைத்தோம் – அசாதுத்தீன் ஒவைசி!

புதுடெல்லி (11 மார்ச் 2022): உத்தரப்பிரதேசத் தேர்தலில் கடுமையாக உழைத்தும் மக்கள் மாற்றி தீர்ப்பளித்துவிட்டனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக நினைத்துப் பார்க்காத வெற்றியை பெற்றது. காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி!

லக்னோ (11 மார்ச் 2022): 2017 இல் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2022 தேர்தலில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற சில முக்கிய முஸ்லிம் எம்.எல்.ஏக்களில் அசம் கான், அவரது மகன் அப்துல்லா ஆசம் கான் ஆகியோர் அடங்குவர். 19% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 8.93% சிறுபான்மை சமூகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி…

மேலும்...