குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான நியாய விலைக் கடை பொருள்கள் விலையேதும் இல்லாமல் வழங்கப்படும் எனவும் முதல்வா் பழனிசாமி அறிவிப்புச் செய்தாா். இதுகுறித்து, பேரவை விதி 110-ன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:- கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு தொடா்ந்து…

மேலும்...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி பறிப்பு!

சென்னை (22 மார்ச் 2020): அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பால் வளத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இருந்தபோதும் அவ்வப்போது பாஜகவினரையே விஞ்சும் அளவுக்கு பாஜக ஆதரவு கருத்துக்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க – முதல்வர் எச்சரிக்கை!

சென்னை (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் கூட்டம் நிறைந்த…

மேலும்...

பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல் – முதல்வர் எடப்பாடி உத்தரவு!

சென்னை (15 மார்ச் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் மற்றும் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) தொடக்கப்பள்ளிகளுக்கு (1 ஆம் வகுப்பு முதல் முதல் 5 ஆம்…

மேலும்...

கரூரில் கலகலப்பு – எடப்பாடியை வரவேற்ற திமுக -VIDEO

கரூர் (06 மார்ச் 2020): தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கரூரில் வரவேற்க அதிமுக கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் திமுக கொடியும் இடையே பறந்து கலகலப்பூட்டியது. தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கரூருக்கு வியாழன் அன்று வந்தார். கரூர் அடுத்த காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 ஆம் தேதி அன்று தமிழக…

மேலும்...

தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில்…

மேலும்...

முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…

மேலும்...

தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் – முதல்வர் எடப்பாடி பதில்!

திருச்சி (26 பிப் 2020): தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திருச்சியில் முக்கொப்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய அணையின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், , “கதவணை கட்டுமான பணியில் 35 % பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மொத்தமுள்ள 484 பைல்களில் ( தூண்களில் ) தற்போது வரை…

மேலும்...

தமிழகத்தில் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் பயணம் – மோடிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (26 பிப் 2020): தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில், ஹஜ் புனித பயணம் செல்வதற்கு, மாநில ஹஜ் கமிட்டி வாயிலாக, 6,028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஏழு குழந்தைகளும் அடக்கம். இவர்களில், 3,736 பேருக்கு மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால், பல…

மேலும்...

அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

சென்னை (23 பிப் 2020): இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ட்ரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு…

மேலும்...