உலகின் சிறந்த விமான நிலையங்கள் 2021 எவை தெரியுமா?

கத்தார் (08 ஆகஸ்ட் 2021): 2021 ஆம் ஆண்டுக்கான, உலகின் தலை சிறந்த விமான நிலையங்களுக்கான விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த விருதை Skytrax நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட பிரிட்டனின் Skytrax நிறுவனம், கடந்த 1989 இலிருந்து உலகின் சிறந்த விமானச் சேவை மற்றும் விமான நிலையங்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதன்படி, கத்தாரின் ஹாமத் இண்டர்நேஷனல் ஏர்போர்ட், உலகின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு,…

மேலும்...

கத்தார் வழியாக சவூதி செல்லும் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

தோஹா (04 ஆக 2021): தற்போது சவூதி அரேபியாவிற்கு செல்வோர் நேரடியாக செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சவூதி அரேபியா பயணத் தடை செய்யாத மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே சவூதி செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் சவூதி செல்ல வழித்தடமாக கத்தாரை தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளை கத்தார் வழியாக வருபவர்கள் கத்தார் மற்றும் சவுதி அங்கிகரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கத்தாரில் தங்குவதற்கு ஏஜெண்டுகள் நீண்ட கால…

மேலும்...

கத்தார் இந்தியா இடையே கோஃபார்ஸ்ட் புதிய பட்ஜெட் விமான சேவை!

தோஹா (02 ஆக் 2021): கத்தார் –  இந்தியா இடையே மற்றும் ஒரு விமான சேவையாக கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடங்கவுள்ளது. இந்தியாவின் பட்ஜெட் விமானமான நிறுவனமான கோ ஏர் ஏர்லைன்ஸ் அதன் பெயரை கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் என மாற்றியுள்ளது. இது கொச்சி தோஹா இடையே வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனிக்கிழமை) தனது விமான சேவையை நடத்தும். அதேபோல கண்ணுர் தோஹா இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை நடத்தும். மேலும் தோஹாவிலிருந்து…

மேலும்...

தங்க மனசா? தங்கப்பதக்கமா? – டோக்கியோ ஒலிம்பிக்கில் கத்தார் வீரர் செய்த மறக்கமுடியாத நிகழ்வு!

டோக்கியோ (02 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம்தான் உலகமெங்கும் பேசுபொருள் ஆகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில், கத்தாரின் முதாஜ் எஸ்ஸா பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கப் பதக்கத்திற்காக கடுமையாகப் போராடினார்கள். இருவருமே 2.37 மீ உயரம் தாண்ட, எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்தது ஒலிம்பிக் கமிட்டி. மூன்று…

மேலும்...

ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது கத்தார்!

டோக்கியோ (31 ஜுலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தினை வென்று கத்தார் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கத்தார் நாட்டுப் பிரஜையான ஃபாரிஸ் இப்ராகிம், கத்தார் நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் ஃபாரிஸ், 96 கிலோ எடைப் பிரிவில் வென்று ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார். ஃபாரிஸ் மொத்தம் 402 கிலோ தூக்கி சாதனை படைத்து கத்தாருக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு முன் 2016 ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் முடாஸ் பார்ஷிம் என்பவர்…

மேலும்...

கத்தாருக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆகஸ்ட் 2 முதல் புதிய வழிமுறைகள் அமல்!

தோஹா (30 ஜுலை 2021): கத்தாருக்கு இந்தியா உட்பட ஆறு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வரும் ஆகஸ்ட் 2 முதல் அமலுக்கு வருகின்றன. இதுகுறித்து இந்திய தூதரகம் இந்திய பயணிகளுக்கு விடுத்துள்ள உத்தரவின்படி, கத்தாரில் தடுப்பூசி போடப்பட்டது குறித்து ஆவணம் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். இரண்டாவது நாளில், RTPCR சோதனை எடுத்து கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வந்துவிடலாம்.. அதேவேளை கத்தாருக்கு வெளியில் இருந்து…

மேலும்...
Qatar tops In Corona Cure 1

குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு தனிமைப் படுத்தலில் சலுகை!

தோஹா (17 ஜூலை 2021): கத்தர் நாட்டிற்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடாமல் வரும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு, தனிமை படுத்தலில் 14 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த நடைமுறை, குறைந்த சம்பளம் பெறுபவர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது. டிஸ்கவர் கத்தர்  என்கிற இணைய தளத்தில் இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் முன்பதிவினையும் மேற் கொள்ளலாம். (www.discoverqatar.qa) கத்தருக்கு வருபவர்கள் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி பெற்றிருந்தால் தனிமைப் படுத்தல் அவசியமில்லை…

மேலும்...

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் கத்தார் நாட்டிற்கு அங்கீகாரம்!

தோஹா (10 ஜூலை 2021): கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. லக்சம்பர்க், நோர்வே மற்றும் டென்மார்க் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது….

மேலும்...

கத்தாரில் மேலும் தளர்த்தப்படும் சில கோவிட் கட்டுப்பாடுகள்!

தோஹா (08 ஜூலை 2021): கத்தாரில் கோவிட் கட்டுப்பாடு தளர்வுகளின் ஒரு பகுதியாக மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிதிருத்தும் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் தோஹா மெட்ரோ ஆகியவற்றிற்கு 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்படும். அதேபோல பொது இடங்களில் பதினைந்து பேர் வரை கூடலாம். தனியார் சுகாதார நிலையங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும்...

கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்திய பெண் மீட்பு!

தோஹா (08 ஜூலை 2021): சவூதி, கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர், சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த எலிசம்மா என்ற பெண் கத்தார் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். கத்தாருக்கு வந்தபின் எலிசம்மா அவரது ஸ்பான்சரால் சவூதி, கத்தார் எல்லையில் உள்ள சல்வா பாலைவனத்தில் ஆடுகள் மேய்க்க பணிக்கப் பட்டுள்ளார். சரியான உணவின்றி, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடந்த இரண்டரை வருடங்களாக இந்த கடும்…

மேலும்...