நாட்டை பாதுகாப்பதே உள்துறை அமைச்சரின் பணி கோவில் திறப்பு விழா அல்ல – அமித்ஷா மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

அகர்தலா (06 ஜன 2023): அடுத்த ஆண்டு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என அமித்ஷா கூறியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே உள்துறை அமைச்சரின் பணி என்றும், கோயிலை திறப்பது குறித்து கோயில் அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பாபர் மசூதி – ராமர் கோவில் குறித்த வழக்கில் 2019 நவம்பரில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. சர்ச்சைக்குரிய…

மேலும்...

திரிபுராவில் பாஜகவுக்கு பலத்த அடி!

அகர்தலா (29 டிச 2022): : திரிபுராவில் பாஜக எம்எல்ஏ திபச்சந்திரா ஹ்ரான்கவுல் கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏக்களின் தொடர் விலகலால் அங்கு பாஜக ஆட்டம் கண்டுள்ளது. இவர் ஓராண்டில் கட்சியிலிருந்து வெளியேறும் எட்டாவது எம்.எல்.ஏ. திபச்சந்திரா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த 67 வயதான இவர், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். அவர் தலாய் மாவட்டத்தில் உள்ள கரம்சேராவில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தார். பாஜக…

மேலும்...

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் தகவலுக்கு மற்றவர்கள் எம்பியை கேலி செய்ய முன்வந்ததால் அவர் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் காலிக். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மெஸ்ஸி…

மேலும்...

தெலுங்கானா காங்கிரஸில் 13 மூத்த தலைவர்கள் ராஜினாமா!

ஐதராபாத் (19 டிச 2022): தெலுங்கானா மாநில காங்கிரசில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் 13 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், மற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ தனாசாரி அனுசுயா, முன்னாள் எம்எல்ஏ வேம் நரேந்திர ரெட்டி ஆகியோர் ராஜினாமா செய்தவர்களில் அடங்குவர். ராஜினாமா கடிதத்தில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்….

மேலும்...

இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர்சிங் சுக்கு நாளை பதவியேற்பு!

புதுடெல்லி (10 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர்சிங் சுக்கு, மாநில முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக 58 வயதாகும் சுக்விந்தர்சிங் சுக்குவின் பெயரை தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை, முதல்வராக கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. சுக்விந்தர்சிங் சுக்கு, கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும்…

மேலும்...

குஜராத்தில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி!

அஹமதாபாத் (10 டிச 2022): நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டன. இத்தேர்தலில் 156 தொகுதிகளில் வெற்றிபெற்று குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில், குஜராத்தில்…

மேலும்...

காங்கிரஸ் மீது முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (10 டிச 2022): “மாநிலங்களவையில் பொதுசிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இல்லை” என்று முஸ்லிம் லீக் எம்பி பி.வி அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார். “தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் இல்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல் தேசிய அளவில் எதிர்க்கட்சி வரிசையில் ஒற்றுமை இல்லை.” என்று அப்துல் வஹாப் தெரிவித்தார். மேலும் ராஜ்யசபாவில் அமலாக்க சட்டம் குறித்த தனியார் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள்…

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

தேசிய கட்சியாக அங்கீகாரம் கிடைப்பது எப்படி?

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கு வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், கருத்துக் கணிப்புகளின்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 9 முதல் 21 இடங்கள் கிடைக்கும். குஜராத்தில் குறைந்தது இரண்டு இடங்களையாவது பெற்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கும். தேசிய கட்சி அந்தஸ்து பெறுவதற்கு சில…

மேலும்...

ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 26 சதவீதம். இதற்கிடையில் பாஜகவின் வாக்கு வங்கி அசைக்கப் படவில்லை. 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. 2017ல் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ்…

மேலும்...