தன்னார்வலர்கள் உதவுவதற்கு தடையில்லை – சென்னை காவல் ஆணையர் தகவல்!

சென்னை (13 ஏப் 2020): தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்ய தடை விதிக்கப்படவில்லை ஆனால் வழிமுறையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது, அதை அரசிடம் அளிக்கவேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பலமுனையிலிருந்தும் எதிர்ப்பு வரவே, இதுகுறித்து சென்னை காவல் ஆணையர்…

மேலும்...

டெல்லி கலவரத்திற்கு காவல்துறையே காரணம் – உச்ச நீதிமன்றம் காட்டம்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி கே.எம்.ஜோசப் முன்பு நடந்த இந்த விசாரணையில், காவல்துறையை நீதிபதி கடுமையாக சாடினார். வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும். ஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறி போக விட்டீர்கள். காவல் துறையின் மெத்தனப் போக்கால் தான் பிரச்சினை பெரிதானது. டெல்லி கலவரம்…

மேலும்...

டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் அவசர உத்தரவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தினை குறித்து நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உடனடியாக அளிக்கவேண்டிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு நள்ளிரவில் நடந்த விசாரணையில், டெல்லி உயர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது. நீதிபதி எஸ். முர்லிதரின் இல்லத்தில், காயமடைந்தவர்களுக்கு போதுமான வசதிகள் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற அவசர வேண்டுகோளின் பேரில் இந்த…

மேலும்...

பெண்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்த காவல்துறைக்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் காவல்துறை நடத்திய அராஜக வெறியாட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த உலமா சபையின் அறிக்கையில் , “அமைதி வழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறை கண்ணியமற்ற முறையில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் தடியடி நடத்திய காவல்துறை மீது அரசு துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று…

மேலும்...

ஜனநாயக ரீதியான போராட்டங்களை சீர்குலைக்கும் காவல்துறை: எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக வழியில் போராடும் மக்கள் மீது காவல்துறை நடத்திய அராஜகம் கண்டிக்கத்தக்கது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த போராட்டத்தை சீர்குலைக்கும்…

மேலும்...

சிறுவர்களை துன்புறுத்தியது தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை – நீதிமன்றம் அதிரடி!

பெங்களூரு (14 பிப் 2020): மாணவர்களை அவசியமின்றி துன்புறுத்திய போலீஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மாணவர்களை கேள்வி மேல் கேட்டு துன்புறுத்தியது. மேலும்…

மேலும்...

மது போதையில் தகராறு – போலீசுக்கு பொதுமக்கள் சரமாரி அடி உதை!

திண்டுக்கல் (14 பிப் 2020): திண்டுக்கல் அருகே போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலரை பொதுமக்கள் நன்றாக கவனித்து அனுப்பினர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் பாண்டியராஜன். இவர் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஒருவர் மீது மோதியுள்ளார். யார் மீது மோதினாரோ அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் பாண்டியராஜன். மேலும் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அருகில் இருந்த பொதுமக்கள் பாண்டியராஜனை நன்றாக…

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லி ஷஹீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை…

மேலும்...

சினிமா பாணியில் சிறுவர்கள் சிறைபிடிப்பு – கொலை குற்றவாளி சுட்டுக் கொலை!

பரூக்காபாத் (31 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் 20 சிறுவர்களை சிறைபிடித்த கொலை குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருக்காபாத் அருகே உள்ள கசாரியா கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் பாதம். கொலை வழக்கில் தொடர்புடையவர், பிறந்த நாள் பார்டிக்காக நேற்று பிற்பகலில் சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். பார்டிக்கு வந்த 20 சிறுவர்களை தனது வீட்டின் அடித்தளத்தில் அடைத்துவைத்து கதவை சாத்திக் கொண்ட அவர் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்தார். போலீசாருக்கு தகவல் சென்று அவர்கள்…

மேலும்...