முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி!

புதுடெல்லி (25 அக் 2020): CAA மற்றும் NRC ஆகிய சட்டங்களை முஸ்லிம்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதாக மோகன் பகவத் கூறியுள்ளதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். CAA சட்டம் எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்றும் முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் பகவத் கூறினார். போராட்டம் என்ற பெயரில் நாட்டில் திட்டமிட்ட வன்முறை நடத்தப்படுவதாக பகவத் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள AIMIM தலைவர் ஆசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. சிஏஏ…

மேலும்...

சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுகிறேன் – ஒமர் காலித் நீதிமன்றத்தில் விளக்கம்!

புதுடெல்லி (22 அக் 2020): திகார் சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுவதாக ஜே.என்.யூ முன்னாள் மாணவர் ஒமர் காலித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஒமர் காலித் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம் அளித்த விளக்கத்தில், உமர் காலித் தனது…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மீண்டும் வெடித்த போராட்டம்!

அஸ்ஸாம் (22 அக் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை அடுத்து அசாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அசாம் மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. . நாடே கொந்தளித்தபோதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது கோவிட் தான் என்றும், இந்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்….

மேலும்...

டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனை மேலும் நீட்டிப்பு!

லக்னோ (16 ஆக 2020): சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனையை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்திரப்பிரதேச அரசின் உள்துறை செயலாளர் வினய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், “அலிகார் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனை வாரியம் ஆகியவை அளித்த பரிந்துரையில், கஃபீல் கான் தொடர்ந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவை உத்திரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளது” என…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் கடும் எதிர்ப்பு!

வாஷிங்டன் (27 ஜூன் 2020): இந்திய குடியுரிமைச ட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றன.இது பல இனம் மதம் மொழி…

மேலும்...

டெல்லி சிறையில் வாடிய கர்ப்பிணி மாணவி சஃபூரா ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): டெல்லி திகார் சிறையில் வாடிய அப்பாவி கர்ப்பிணி பெண் சபூராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் சமூகவியலில் ஆய்வு அறிஞரான 27 வயதான ஸர்கர், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 10 ஆம் தேதி, போக்குவரத்தைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் பிணை பெற்ற பின்னர், மீண்டும் ஏப்ரல் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பிப்ரவரி இறுதியில் டெல்லியைச்…

மேலும்...

இந்திய சிறுபான்மையினரின் நிலை குறித்து அமெரிக்க மத சுதந்திர அமைப்பு கவலை!

நியூயார்க் (10 ஜூன் 2020): இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் அவர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள் ஆகியனவற்றைக் கவனத்தில் கொண்டு, அச்சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவர்கள், பல்வேறு மதத்தவர்கள் ஆகியோரை மதிப்பது, மத ஆர்வலர்களுடனும், மதத் தலைவர்களுடனும் சகிப்புத்தன்மையையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்துக் கொள்வது ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை, அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் இந்தியப் பிரிவு, ஆளுங்கட்சிக்கு அடிக்கோடிட்டுக்…

மேலும்...

ஊரடங்கு காலத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்களை கைது செய்வதா? – எதிர் கட்சிகள் கடும் கண்டனம்!

புதுடெல்லி (02 ஜுன் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்களை கைது செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா பவலாலும், ஊரடங்காலும் நாடே பெரும் சோதனை காலத்தில் உள்ளது. இந்நிலையில் அவசியமில்லாமல் சிஏஏ எதிர்ப்பு மாணவர்களை டெல்லி போலீஸ் கைது செய்து வருகிறது. இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக உலகம் இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை கூட்டாக கண்டிக்க…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...

ஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு !

லக்னோ (28 மே 2020): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை போலீசார் ஊரடங்கு காலங்களில் சத்தமின்றி கைது செய்துள்ளனர். ஏற்கனவே டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சஃபோரா சர்கர், மீரன் ஹைதர், ஷிஃபால் ரஹ்மான், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்திலும் போலீசார் முஸ்லிம்களை…

மேலும்...