குடியுரிமைச் சட்ட திருத்தம் குறித்து கபில் சிபல் அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அமுல்படுத்த முடியாதவாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கேரளாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கபில் சிபல் “சிஏஏ நிறைவேற்றப் பட்டுவிட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – அதிரடி காட்டிய பஞ்சாப் அரசு!

சண்டீகர் (17 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபையில் இரண்டு நாள் சிறப்பு…

மேலும்...

ஒரே மகனை விபத்தில் இழந்து தவித்த 54 வயது தாய்க்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

திருச்சூர் (16 ஜன2020): கேரள மாநிலத்தில் 54 வயது பெண்மணி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலோரைச் சேர்ந்த லலிதா என்பருக்குத்தான் இந்த மகிழ்ச்சியான தருணம் அமைந்துள்ளது. லலிதா -மணி தம்பதியினருக்கு இருந்த ஒரே ஒரு மகன் கோபிகுட்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு விபத்தில் பலியானார். இதனால் இருவரும் துயரத்தின் எல்லைக்கு சென்றனர். எனினும் லலிதா மீண்டும் குழ்ந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் அவரது வயது…

மேலும்...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருவனந்தபுரம் (16 ஜன 2020): கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) எடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் கேரள அரசு ஒரு படிமேலே போய் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதனை எதிர்க்கும் உறுதியான மாநிலமாக திகழ்கிறது….

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வரின் அடுத்தடுத்த அதிரடி!

திருவனந்தபுரம் (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மாநில அரசுகளில் கேரள அரசு முதன்மை வகிக்கிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க ஆளாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ, அதோடு சேர்ந்த தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) – தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றையும் செயல்படுத்த…

மேலும்...

சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி குடும்பத்துக்கு ரூ 1 கோடி – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (10 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்களால் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது….

மேலும்...

வட மாநிலங்களுக்கு 5908 கோடி, தமிழகம் கேரளாவுக்கு நாமம்!

புதுடெல்லி (06 ஜன 2020): வெள்ள நிவாரணமாக வட மாநிலங்களுக்கு 5908 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ள மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு பெப்பே காட்டிவிட்டது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 5,908.56 கோடி ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உத்திர பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். ஆனால் பெரிதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யபப்டவில்லை. அதேபோல கஜா புயலால் மிகப்பெரிய…

மேலும்...