பிரபல பிக்பாஸ் பிரபலம் 22 பேருடன் ரகசிய பங்களாவில் போதை விருந்து!

மும்பை (02 ஜுலை 2021): பிரபல பிக்பாஸ் பிரபலம் நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22…

மேலும்...

நடிகை கர்ப்பம் – முன்னாள் அமைச்சர் கைது!

சென்னை (20 ஜூன் 2021): நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5…

மேலும்...

தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா அதிரடி கைது!

புதுடெல்லி (16 ஜூன் 2021): பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது….

மேலும்...

நாகூர் அருகே பரபரப்பு – பெண் வேட்பாளர் கைது!

நாகூர் (17 மார்ச் 2021): நாகூர் அருகே சுயேச்சை வேட்பாளரும் பிரபல தாத்தாவுமான எழிலரசியை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்… இவர் ஒரு பிசினஸ்மேன்.. இவரது 2வது மனைவிதான் எழிலரசி.. 45 வயதாகிறது.. இவர் ஒரு தாதா. இவர் மீது . முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப்படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதனை அடுத்து…

மேலும்...

போதை மருந்து வழக்கில் பாஜக பெண் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது!

கொல்கத்தா (20 பிப் 2021): கொக்கெய்ன் வைத்திருந்த பாஜக இளைஞர் அணி தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 100 கிராம் கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுடன் அவரது நண்பர் பிரபீர் குமார் தேயும் கைது செய்யப்பட்டார். ‘பமீலா சில மாதங்களுக்கு முன்பு, போதை பொருள் மாஃபியா கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி . சிலரை போதைக்கு ஆளாக்கியுள்ளனர். இதற்கு பிரபிர் பாமீலாவிற்கு உதவியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்ட தேடலின் போது அவர்கள் கைது…

மேலும்...

கொரோனவை பரப்பும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் கைது!

அபுதாபி (14 பிப் 2021): அபுதாபியில் கோவிட் பாசிட்டிவ் ரிபோர்ட்டுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கொரோனாவுடன் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பில், தனது மொபைல் தொலைபேசியில் பெறப்பட்ட கோவிட் நேர்மறை சோதனை முடிவை எடுத்துக்காட்டுகிறார். அதேபோல இன்னொருவர் பொது இடத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். வீடியோ கிளிப்பைப் பார்த்த அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்….

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக விஷம கோஷங்களை எழுப்பிய இந்துத்வாவினர் கைது!

லக்னோ (15 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் இந்துத்வாவினர் நடத்திய பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஷிகார்பூர் நகரில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட இருவர் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமத்தனமான கோஷங்களை எழுப்பியுள்ளனர். “இந்துஸ்தான் இந்துக்களுக்கு சொந்தம்…, முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்கிற வகையில் இந்த கோஷங்கள் இருந்துள்ளன. அந்த வீடியோ கிளிப் சமூக…

மேலும்...

சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேர் கைது!

ரியாத் (09 டிச 2020): சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர். சவூதியின் புதிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி விறகு உள்ளிட்டவை விற்பனை செய்வது குற்றமாகும். இந்நிலையில் குளிர்காலம் தொடங்கியதிலிருந்து விறகுகளுக்கான விற்பனை தீவிரமாக உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக விறகு விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்ற 188 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம்,…

மேலும்...

தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – 6 பேர் கைது!

தூத்துக்குடி (5 நவ 2020): தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமைய்யா தாஸ் (51). பாஜக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தில், தென்திருப்பேரை கோனார் தெருவைச் சேர்ந்த இசக்கி (25) என்பவரின் மாடுகள் மேய்ந்துள்ளது. இதனை ராமையா தாஸ் தட்டிக் கேட்டதால்…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமி கைது!

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாக தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்...