கொரோனா வைரஸ் பரவலை தடுத்தலில் அதிரடி காட்டும் கேரளா!

திருவனந்தபுரம் (13 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவலில் கேரள அரசு காட்டிய பல அதிரடிகளால், கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2வது இடத்தில் இருந்த கேரளா 9வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ”கேரள மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 36 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில்…

மேலும்...

தன்னார்வலர்கள் உதவுவதற்கு தடையில்லை – சென்னை காவல் ஆணையர் தகவல்!

சென்னை (13 ஏப் 2020): தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்ய தடை விதிக்கப்படவில்லை ஆனால் வழிமுறையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது, அதை அரசிடம் அளிக்கவேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பலமுனையிலிருந்தும் எதிர்ப்பு வரவே, இதுகுறித்து சென்னை காவல் ஆணையர்…

மேலும்...

இன்று திடீரென இணையங்களில் ட்ரெண்ட் ஆகும் சீமான்!

சென்னை (13 ஏப் 2020): தமிழகம் சார்பாக ஆர்டர் செய்திருந்த ரேபிட் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கைபற்றியது குறித்து வெளியான செய்திக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள ரேபிட் சோதனை கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது. அந்த ரேபிட் சோதனை கருவிகள்…

மேலும்...

ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

லக்னோ (13 ஏப் 2020): நாட்டில் தொடரும் ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் பெண் தொழிலாளி ஒருவர் தனது ஐந்து குழந்தைகளை கங்கை நதியில் வீசி எறிந்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள ஜஹாங்கிராபாத் எனும் ஊரைச் சேர்ந்த தம்பதிகள் மிரிதுல் யாதவ் – மஞ்சு ஆகியோர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் என ஐந்து குழந்தைகள் இருந்தனர். தினக்கூலிகளான இவர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் உணவில்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

மேலும்...

தொடர் வேலையால் அசதியில் குப்பை வண்டியிலேயே உறங்கிய துப்புரவு தொழிலாளி!

நாகர்கோவில் (13 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணியில் இரவு பகலாக உழைக்கும் பெண் துப்புரவு தொழிலாளர் ஒருவர் குப்பை வண்டியிலையே உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசுடன் இணைந்து மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் போன்றோரும்…

மேலும்...

தனியார் ஆய்வகங்களில் இலவச கொரோனா பரிசோதனை – பீலா ராஜேஷ் அறிவிப்பு!

சென்னை (13 ஏப் 2020): தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்களை அரசே ஏற்கும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 14 அரசு மருத்துவமனைகளுக்கும், 9 தனியாா் மருத்துவமனைகளுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியாா் ஆய்வகங்களில்…

மேலும்...

சாதிய திமிர் – மதுவந்திக்கு பாடம் நடத்திய மோனிகா – வீடியோ!

கொரோனா வைரஸ் பீதி உலகையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் சிலர் வெளியிடும் வீடியோக்கள், கேலிக்கும் கிண்டலுக்கும் உரித்தாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திராவின் மகள் மற்றும் கல்வியாளராக காட்டிக் கொள்ளும் மதுவந்தி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்பு அதற்கு மன்னிப்பு கோரியும் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுவந்தி மன்னிப்பு கேட்ட விதம் அவரது சாதிய உணர்வை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதனை விமர்சித்து பிரபல…

மேலும்...

தீண்டாமை நோயில் பற்றி எரியும் மற்றொரு தீண்டாமை – பதற வைக்கும் தகவல்!

குஷிநகர் (12 ஏப் 2020): கொரோனா அறிகுறிகளுடன் தனிமை படுத்தப்பட்டுள்ள இருவர் பட்டியல் இனப் பெண் தயாரித்த உணவை உண்ண மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் குஷிநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 5 நபர்களை அங்குள்ள ஆரம்ப பள்ளியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடுத்தர வயது மதிக்கத்த இருவர் மட்டும் அங்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணிடம் உணவு உண்ண மறுத்து இருவரும் அவர்களது…

மேலும்...

தமிழக அரசின் உத்தரவு பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும் – ஜவாஹிருல்லா கண்டனம்!

சென்னை (12 ஏப் 2020): “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் தன்னார்வலர்கள் உணவு அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது ஏழை கூலித் தொழிலாளிகளின் பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும்,” என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல்…

மேலும்...

கொரோனா வைரசும் திமுகவும் – பகீர் கிளப்பும் அமைச்சர்!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில்,கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட…

மேலும்...