ரேப்பிட் கிட்டில் தவறான முடிவுகள் – கொரோனா சோதனையை நிறுத்தி வைத்தது ராஜஸ்தான் அரசு!

ஜெய்ப்பூர் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் சோதனை முறையான ரேப்பிட் கிட்ஸில் எடுக்கப்படும் முடிவுகள் தவறானவையாக உள்ளதால் இந்த முறையை நிறுத்தி வைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பரிசோதனையை துரிதப்படுத்துவதற்காக ரேபிட் கிட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பரிசோதனை தொடங்கி உள்ளது. இந்த கருவிகள் மூலம் உடனடியாக வைரஸ் தொற்றை கண்டறிய முடியும். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட்…

மேலும்...

ஜனாதிபதி மாளிகையில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

புதுடெல்லி (21ஏப் 2020): இந்திய ஜனாதிபதி தோட்டத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கும் ஒரு பெண் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது, கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்ட அந்த பெண், சிகிச்சைக்காக ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அக்கம் பக்கத்திலுள்ள இரண்டு வீடுகளில் வசிக்கும் மொத்தம் 11 பேர், அவரது கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன், வீட்டு தனிமைப்படுத்தலில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் ராஷ்டிரபதி பவனிலேயே பணிபுரியும் கீழ்-செயலாளர் மட்டத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியின்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகள் – துபாய் இந்திய தூதுவர் எச்சரிக்கை!

துபாய் (21 ஏப் 2020): முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் பதிபவர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினரால் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வளைகுடாவில் வசிக்கும் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இவர்கள்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? – தமிழக கல்வித்துறை அமைச்சர் தகவல்!

சென்னை (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என தமிழக அரசு முன்னமே அறிவித்துள்ளது. இதனிடையே 10ம் வகுப்புகளுக்கு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்ற எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி…

மேலும்...

தண்ணீரிலிரும் பரவும் கொரோனா – பிரான்ஸ் அதிர்ச்சித் தகவல்!

பாரிஸ் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் தண்ணீரிலும் பரவுவதாக பிரான்ஸ் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும்கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் இதுவரை 1.52லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 20 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸ் நகரின் சீன் நதி…

மேலும்...

வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஏப் 2020): தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 127 பேர் தனிமைப் படுத்தப்படுள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 127 பேர் வாரணாசிக்கு ஆன்மீக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து அவர்கள் திரும்ப முடியவில்லை. பின்னர் உத்தரப் பிரதேச மாநில அரசு உதவியுடன்…

மேலும்...

கொரோனாவை பரப்புகிறாயா? – முஸ்லிம் கர்ப்பிணி மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல்!

ஜாம்ஷெட்பூர் (20 ஏப் 2020): ஜார்கண்ட் மாநிலத்தில் ரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனை சென்ற கர்ப்பிணி பெண் மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வானா காத்தூன் என்ற 30 வயது பெண் ஒருவர் கருவுற்றிருந்த நிலையில் அவருக்கு கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜாம்ஷெட்பூர் (எம்ஜிஎம்) மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு மருத்துவம்…

மேலும்...

ஊடகங்கள் மீது நடவடிக்கை – மோடிக்கு நெருக்கடி – முன்னாள் ராணுவ அதிகாரி கடிதம்!

புதுடெல்லி (20 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது குறிவைத்து திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முன்னாள் ராணுவ அதிகாரி கத்ரி கடிதம் எழுதியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஒரு சேர பாதித்துள்ளது. ஆனால் இந்திய ஊடகங்கள் கொரோனாவை எப்படி விரட்டுவது என்பதில் கவனம் செலுத்தாமல், கொஞ்சம் கூட…

மேலும்...

கொரோனா பரப்பிவிடுவதாக முஸ்லிம் போல் உடையணிந்து மிரட்டிய இந்துத்வா ரவுடிகள் கைது!

மாண்டியா (20 ஏப் 2020): முஸ்லிம்கள் போல் உடையணிந்து வந்து ‘கொரோனா பரப்பி விடுவோம்’ என மிரட்டிய மூன்று இந்துத்வா ரவுடிகளை மாண்டியா போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள ஒரு காவல்துறை பரிசோதனை மையத்தில், முஸ்லிம்கள் அணியும் நீண்ட பைஜாமா, தொப்பி உள்ளிட்டவை அணிந்து வந்த மூன்று இளைஞர்களை போலீசார் நிறுத்தியுள்ளனர். உடனே அவர்கள், “நாங்கள் முஸ்லிம்கள்; கொரோனாவால் தனிமைப் படுத்தலில் உள்ளோம்; எங்களை கைது செய்ய நினைத்தால் உங்கள் மீது…

மேலும்...

விவசாயம் – மீன்பிடி தொழில்களுக்கு இன்று முதல் அனுமதி!

புதுடெல்லி (20 ஏப் 2020): உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இன்றுமுதல் விவசாயம் மீன்பிடி தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல்வேறு மாநிலங்களில் 26 நாட்களுக்‍கு பிறகு இன்று தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்‍கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…

மேலும்...