திமுகவுக்கு வாக்கு சேகரித்த காடுவெட்டி குருவின் மகளிடம் பாமகவினர் வாக்குவாதம்!

அரக்கோணம் (29 மார்ச் 2021): அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகையை பாமகவினர் சிலர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தை நிறுத்தி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திரும்பிச் சென்றார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரன் பென்னாகரம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவர் சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, சோமனஅள்ளி, பூதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேல்கொல்லபட்டி கிராமத்தில்…

மேலும்...

ராகுல் காந்தி, ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை?

சேலம் (29 மார்ச் 2021): நேற்று ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என தெரிகிறது. சேலத்தில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அணைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தற்போது கொரோனா…

மேலும்...

நீக்கப்பட்ட பிரதமர் மோடி – பாஜகவில் பரபரப்பு!

சென்னை (28 மார்ச் 2021): தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைக்கு அஞ்சி, பாஜக வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் மோடியின் பெயர் தொடர்ந்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே எழுதப்பட்ட மோடியின் பெயர் ஒயிட்வாஷ் மூலம் அழிக்கப்படுகின்றன.. அதிமுக மட்டுமல்லாமல் பாஜக வேட்பாளர்களும் மோடியை தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்துகின்றனர்….

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ வேண்டும் – ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (28 மார்ச் 2021): எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ்ந்து தி.மு.க. ஆளுகின்ற காட்சியை பார்க்க வேண்டும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (28-03-2021), ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, காங்கேயத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, “தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள்; தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில்…

மேலும்...

ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக தமிமுன் அன்சாரி தேர்தல் பிரச்சாரம்!

நாகை (27 மார்ச் 2021): திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிமுன் அன்சாரி தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சிதம்பரம், காட்டு மன்னார்குடி, பன்ருட்டி ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார். நாளை (28-ந் தேதி) மற்றும்…

மேலும்...

திமுக நிர்வாகிகள் மீது கனிமொழி திடீர் பாய்ச்சல்!

சென்னை (27 மார்ச் 2021): திமுகவினரின் சர்ச்சையான பேச்சுக்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர்…

மேலும்...

சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ,…

மேலும்...

பிரிக்கப்போவது அமமுக – ஜெயிக்கப்போவது திமுக!

சென்னை (24 மார்ச் 2021): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமமுக தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலும் கூட்டணி அமைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமானும் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். பல முனை தாக்குதல் நடத்தப்படுவதால் யாருக்கு…

மேலும்...

கொரோனா பரவலால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடையா? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சென்னை (22 மார்ச் 2021): கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. , தேர்தல் பிரச்சாரங்களின் போது முக கவசம் அணிவது, தனி மனித விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது….

மேலும்...

பிரச்சாரத்தின்போது கமலை கிண்டலடித்த ரசிகர் மீது கமல் காட்டம்!

கோவை (21 மார்ச் 2021): கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசனை கிண்டலடிக்கும் வகையில் கேள்வி கேட்ட ரசிகர் மீது கமல் கடும் கோபமாக பேசினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று கோவை மாவட்டம், பீளமேட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர் அவரை சதிலீலாவதி படத்தில் வரும் கோவை பாஷையில் பேசுமாறு கேட்டார். அதற்கு கமல்ஹாசன், “நான் இங்கு நடிக்க வரவில்லை. உங்களுக்கு அதுதான் வேண்டுமென்றால், யூடியுபில் அந்த சினிமா…

மேலும்...