விவசாயி எடப்பாடி டெல்லியில் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா? – ஸ்டாலின் கேள்வி!
சென்னை (21 மார்ச் 2021): தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உத்திரமேரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தனது…