இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தம்!

புதுடெல்லி (18 செப் 2021): இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவூதி அரேபியா இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சார்ட்டட் விமான சேவை மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது UAE கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மூலம் இணைப்பு விமான சேவைகள் இப்போது இலகுவாக கிடைக்கின்றன. இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சவுதி அரேபியாவிலிருந்து…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

சவூதியில் 200 க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு!

ரியாத் (01 செப் 2021): சவூதியில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி சுகாதார அமைசகத்தின் அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 185 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன மேலும் 7 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இது சவூதியில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 544,634 ஆகவும், வைரஸ் தொடர்பான மரணம் 8,552 ஆகவும் உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 301 பேர் குணமடைந்துள்ளனர், இதனால்…

மேலும்...

கோவிட் நடைமுறை சில தளர்வுகளை அடுத்து இந்தியாவிலிருந்து சவூதிக்கு இந்தியர்கள் வருகை!

ஜித்தா (30 ஆக 2021): சவுதியில் இரண்டு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் வேறு நாட்டில் தனிமைப்படுத்தல் இன்றி சவூதி திரும்பலாம் என்ற உத்தரவை அடுத்து இந்தியர்கள் சவூதி அரேபியா வர தொடங்கியுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 395 பயணிகளுடன் ஜித்தா வந்த சவூதி அரேபின் ஏர்லைன்ஸ் சார்ட்டட் விமானத்தில், வந்த பயணிகள் ஏஜெண்டுகள் அரை லட்சத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கூறினர். ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் வருவதற்கு சவூதி அரேபியா தடை விதிக்கவில்லை என்கிற போதிலும், புதிய…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் நாடு திரும்பினர்!

ரியாத் (29 ஆக 2021): சவுதி அரேபியாவின் அல்-ஹஸாவில் மூன்று வருடங்கள் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் இருவர் நாடு திரும்பினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜெயசேகரன் பிரான்சிஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொத்தனார் வேலைக்காக சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு சென்றனர். முதல் ஆண்டு சம்பளம் சரியாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. சம்பளம் வழங்கப்படாததற்காக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் வேறொரு போலியான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஒரு சமூக…

மேலும்...

சினோஃபாம் மற்றும் சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு சவூதி அரேபியா அனுமதி

ரியாத் (25 ஆக 2021): சவூதி அரேபியா மேலும் இரண்டு கோவிட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் பாயன்டெக், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மோடெனா ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும், சீன தடுப்பூசிகளான சினோஃபாம் மற்றும் சினோவாக்கிற்கு சவுதி சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை ஆறாகக் கொண்டுவருகிறது. அதேவேளை முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஜான்சன்…

மேலும்...

கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாயாக்கும் சவூதி அரேபியா!

ரியாத் (22 ஆக 2021): கோவிட் கட்டுப்பாடுகளை மீறி குடும்ப கூட்டங்கள் நடத்தினால் 10 ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். என்று சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சவூதி அரேபியாவில் கோவிட் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அது மேலும் பரவாமல் தடுக்க சவூதி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது அதன்படி அதிகப்படியாக கூடும் கூட்டங்களால்தான் கோவிட் பவரால் அதிகரிக்கிறது என்பதால் கூட்டம் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதியில் குடும்ப நிகழ்வுகளுக்கு…

மேலும்...

சவூதியில் சமூக வலைதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் ஹரீஷ் விடுதலை!

தம்மாம் (19 ஆக 2021): சவூதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க அளவில், பதிவிட்டு கைதான கர்நாடகாவை சேர்ந்த ஹரீஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியா தம்மாமில் பணிபுரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹரீஷ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் புனித மக்காவையும், சவூதி அரசாங்கத்தையும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அவரை டிசம்பர் 20, 2019 அன்று சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதான ஹரீஷை விடுதலை செய்ய…

மேலும்...

விடுப்பில் இந்தியா சென்று சவூதி வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலத்தை செப்டம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவு!

ரியாத் (17 ஆக 2021): சவூதியிலிருந்து விடுப்பில் ஊர் சென்று திரும்ப வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலம் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காலாவதியானவர்களின் குடியுரிமை அட்டை, (இக்காமா) காலமும் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து, சவுதி அரேபியா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானங்களை தடை செய்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சவுதி…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (13 ஆக 2021): சவூதியில் ‘தவக்கல்னா’ அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சவூதியில் ‘தவக்கல்னா’ என்ற அப்ளிகேஷன் அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் அரசு சார்ந்த பல சொந்த விவரங்கள் அந்த அப்ளிகேஷனில் உள்ளடக்கியிருக்கும். கொரோனா பாதித்தவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டது உறுதி செய்யப்பட்டவை அனைத்தும் அதில் பதிவாகியிருக்கும். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இரு டோஸ் தடுப்பூசி போட்டதுபோல் மோசடி செய்ய உதவியதாக சிரியாவை சேர்ந்த இருவரையும்,…

மேலும்...