கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து சவூதி அணியின் கேப்டன் விலகல்!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து காயம் காரணமாக சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் விலகியுள்ளார். கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை காரணமாக போட்டியிலிருந்து விலக்கப் பட்டுள்ளார். சல்மான் அல்-ஃபராஜ் தொடர்ந்து விளையாட முடியாது என்கிற மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து…

மேலும்...

சவூதியில் பினாமி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (28 நவ 2022): சவூதியில் பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை லட்சம் நிறுவனங்கள் தங்கள் நிலையை சரி செய்யுமாறு வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது பினாமி பரிவர்த்தனைக்கான அறிகுறிகளைக் கண்டறிந்த நிறுவனங்களுக்கு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் பினாமி பரிவர்த்தனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், 3.5 லட்சம் நிறுவனங்கள் தங்கள்…

மேலும்...

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகெரட் விற்பனை செய்யக்கூடாது – சவூதி அரேபியாவில் புதிய சட்டம்!

ஜித்தா (06 அக் 2022): சவூதி அரேபியாவில் திருத்தப்பட்ட புகைத்தல் தடுப்புச் சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது சவூதி ஷூரா கவுன்சில், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புகையிலை பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய சட்டத்தின்படி மசூதிகள், அமைச்சகங்கள், அரசு…

மேலும்...

சவூதி லூலூவில் இந்திய கண்காட்சி – ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு!

ரியாத் (20 செப் 2022): ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளில் இந்திய திருவிழா தொடங்கியது. ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி லுலுவில் சுமார் 10,000 இந்திய உணவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ரியாத் முராப்பா லுலுவில் நடைபெற்ற விழாவில் லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசபலி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு வகையான தினைகள், ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களை…

மேலும்...

இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவூதி அரேபியா வருகை!

ரியாத் (18 செப் 2022): இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக சவுதி அரேபியா வந்துள்ளார். அமைச்சர் பியூஷ் கோயல் ரியாத்தில் சவுதி அரேபிய வர்த்தக அமைச்சர் மஜித் அப்துல்லா அல் கசாபியை சந்தித்தார். இந்தியா-சவுதி இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பியூஷ் கோயல் ஜுபைல் யாம்பு சவுதி ராயல் கமிஷன் தலைவர் காலித் அல்-சலீமுடன் கலந்துரையாடினார். பொருளாதார வளர்ச்சியை…

மேலும்...

சவுதியில் விதிகளை மீறி சாலையின் குறுக்கே நடந்தால் அபராதம்!

ரியாத் (17 செப் 2022): சவுதி அரேபியாவின் தம்மாமில், விதிகளை மீறி சாலையை கடந்த பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சவூதி போக்குவரத்து துறையினர் சட்டவிரோதமாக சாலைகளை கடப்பவர்களுக்கு எதிராக சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீப நாட்களில் தம்மாம் சீக்கோக் அருகே சாலைகளைக் கடந்ததற்காக இந்தியர்கள் உடன்பட பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் விபத்தில் சிக்குவதால் போக்குவரத்து துறையினர் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும்...

சவூதி விசிட் விசாவை குடியிருப்பு விசாவாக மாற்ற முடியுமா? – பாஸ்போர்ட், இக்காமா அலுவலகம் விளக்கம்!

ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாவில் வந்து தங்கியிருப்பவர்கள் அவர்களது குடியிருப்பு விசாவை மாற்ற முடியாது என்று சவுதி பாஸ்போர்ட் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. விசிட் விசாவில் வருபவர்கள் குடியிருப்பு விசாவிற்கு மாறலாம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துள்ளது. சவூதியில் அத்தகைய அமைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு விசாவை மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் குவிந்துள்ளன. இது முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்ற…

மேலும்...

சவுதியில் 15000 வெளிநாட்டினர் கைது!

ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்தில் சட்டத்தை மீறியவர்கள் 15,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை அனுமதி காலாவதியானவர்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தவர்கள், தொழிலாளர் சட்டங்களை மீறியவர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறுபவர்களைக் கண்டறியும் விசாரணை நாடு முழுவதும் வலுவாகத் தொடர்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ், பல்வேறு துறைகள் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

மேலும்...

சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை!

ரியாத் (11 செப் 2022): சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் சவூதி அரேபியா வந்துள்ளார். சனிக்கிழமை மாலை ரியாத் இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சவூதியில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்தகோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஜெயசங்கர் பதிலளித்தார். வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய…

மேலும்...

சவூதிக்கு பணிபுரிய செல்பவர்களுக்கு இந்திய காவல்துறை கிளியரன்ஸ் அவசியம்!

ஜித்தா (12 ஜூலை 2022): : சவூதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் அனைத்து இந்தியர்களும் சவுதி இந்தியாவின் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை (பிசிசி) சமர்ப்பிக்க வேண்டும். மும்பையில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகம், எந்தவொரு வேலைவாய்ப்பு விசா ஒப்புதலுக்கும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை வழங்குமாறு பயண முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதி ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டாய பிசிசி விதிமுறை ஏற்கனவே டெல்லியில் உள்ள சவுதி அரேபிய…

மேலும்...