சவூதியில் மரண தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை!

தம்மாம் (29 ஜூலை 2022):சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார். சவுதி அரேபியா தம்மாமில் ஒரு சலவை நிலையத்தில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் ஹுசைன் மற்றும் தாமஸ் மேத்தியூ ஆகியோருக்கு இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ஜாகிர் ஹுசைன் தாமஸ் மேத்தியூவை கத்தியால் குதியுள்ளார். படுகாயம் அடைந்த தாமஸ் மேத்தியூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளி ஜாகீரை காவல்துறையினர் கைது செய்து…

மேலும்...

இவ்வருடம் 10 லட்சம் ஹஜ் யாத்திரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (09 ஏப் 2022): இவ்வருடம் (2022) 10 லட்சம் ஹஜ் யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோய் பரவியதில் இருந்து வெளிநாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு உள்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஒரு மில்லியன் மக்களை ஹஜ் செய்ய அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...

சவூதி பஹ்ரைன் தரைவழி பயணத்திற்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!

ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது. அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச் சலுகை பெற்றவர்களுக்கும் இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் கவரேஜுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். சவூதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை அளித்துள்ள நிலையில், காஸ்வே ஆணையத்தின் உத்தரவு…

மேலும்...

சவுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் உம்ராவுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பு!

ரியாத் (18 ஜன 2022): சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உம்ரா யாத்ரீகர்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு உம்ராக்களுக்கும் இடையில் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் 30 நாட்களில் மூன்று முறை மட்டுமே உம்ரா செய்யலாம். முன்னதாக, சவுதி அரேபியாவிற்குள் உள்ளவர்கள், உம்ராவை ஒருமுறை நிறைவேற்றிய 10 நாட்களுக்குப் பிறகு மட்டுமே இன்னொரு…

மேலும்...

கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி!

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி! ரியாத் (15 டிச 2021): இந்தியாவில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் சவூதி சுகாதார அமைச்சகத்தின் தவக்கல்னா அப்ளிகேசனில் பதிவு செய்யலாம். இதன் மூலம் கோவாக்சின் பெற்றவர்களுக்கு தவக்கல்னா ஆப்பில் நோய் எதிர்ப்பு நிலை காட்டப்படும். சுற்றுலா (விசிட்டிங்) விசா வைத்திருப்பவர்களும் தடுப்பூசி சான்றிதழ்களுக்காக பதிவு செய்யலாம். ஏற்கனவே சவூதி அரேபியாவில் ஃபைசர், மொடெனா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ரா செனிகா அல்லது…

மேலும்...

சவூதியில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இந்தியர்கள் மரணம்!

ரியாத் (04 டிச 2021): சவூதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹம்மது ஜாபிர் என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஜுபைல் நகரிலிருந்து ரியாத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ரியத்திலிருந்து 198 கி.மீ தூரத்தில் உள்ள அல்ரைன் என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. . ஜாபிர் குடும்பத்தினருடன் பயணித்த வாகனம் அல் ரெய்ன் என்ற இடத்தில் மற்றொரு…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி…

மேலும்...

சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் சென்ற வெளிநாட்டவர்களின் இக்காமா மற்றும் விசா காலாவதி காலம் மீண்டும் இலவச நீட்டிப்பு!

ரியாத் (28 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் இக்காமா காலாவதி காலம் வரும் ஜனவரி 2022 31 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான்…

மேலும்...

வெளிநாட்டு ஹஜ் உம்ரா யத்ரீர்கர்களுக்கு மேலும் புதிய வசதி ஏற்பாடு!

ஜித்தா (18 நவ 2021): வெளிநாட்டில் இருந்து நேரடியாக உம்ரா யாத்திரைக்கான அனுமதி பெற்றவர்கள் பேருந்து சேவையையும் தவக்கல்னா என்கிற அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதை சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. புதிய சேவைகள் வெளிநாட்டிலிருந்து மக்கா மற்றும் மதீனாவுக்கு வரும் யாத்ரீகர்கள். பயன்பாட்டில் உள்ள தவக்கல்னா ஆப்பில் ஹஜ் உம்ரா சேவையில் அனுமதி வழங்கல் ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதில் இருந்து எந்த பெர்மிட்கள் எடுக்க…

மேலும்...