பாஜகவுக்கு அடிமேல் அடி – முக்கிய தலைவர்கள் ராஜினாமா!

மும்பை (10 பிப் 2021): மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்த ஏழு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சிவசேனாவின் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா பாஜகவுக்கு சிவசேனா சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கொங்கன் பிராந்தியத்தில் உள்ள வைபவ் வாடி மாநகராட்சியின் ஏழு கவுன்சிலர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவிற்கு வந்து சென்ற சில மணி நேரங்களிலேயே அவர்கள் பாஜகவை…

மேலும்...

மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு – டெண்டுல்கர் மீது விசாரணைக்கு சிவசேனா அரசு உத்தரவு!

மும்பை (08 பிப் 2021): மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவிட்ட பிரபலங்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த மகாரஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல்…

மேலும்...

பாஜக தலைவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்தரவதை செய்த சிவசேனாவினர்!

சோலாப்பூர் (08 பிப் 2021): மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சனம் செய்த பாஜக தலைவர் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவினர் அவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்ரவதை செய்துள்ளனர். கடந்த காலங்களில் உத்தவ் தாக்கரேவை விமர்சிப்பவர்களை சிவசேனாவினர் தாக்கியுள்ளனர். முன்னாள் கடற்படை அதிகாரியான மதன் சர்மா, தாக்கரேவை கேலி செய்யும் கார்ட்டூனைப் பகிர்ந்ததற்காக கடந்த ஆண்டு சிவசேனாவினரால் தாக்கப்பட்டார். இந்நிலையில் உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்த பாஜக தலைவர் ஷிரிஷ் கட்டேகரை முற்றுகையிட்ட சிவசேனாவினர்…

மேலும்...

அமலாக்கத் துறைஅலுவலகம் முன் பாஜக அலுவலகம் என பேனர் கட்டி அதிரடி காட்டிய சிவசேனா!

மும்பை (28 டிச 2020) : மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அலுவலகம் முன் சிவசேனா ‘பாஜக அலுவலகம்’ என்ற பேனரை தொங்கவிட்டு போராட்டம் நடத்தியது. பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா நடத்திய போராட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில் ‘பாஜக பிரதேச அலுவலகம்’ என்று எழுதப்பட்டிருந்தது. . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்ஷா…

மேலும்...
Sanjay Rawath

ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு!

புதுடெல்லி (14 நவ 2020): ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் விமர்சனத்திற்கு சிவசேனா ஒபாமாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவர் எழுதியுள்ள புத்தகத்தில் ராகுல் காந்தி குறித்து பாடங்களை சரியாக படிக்காத மாணவர் என்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி ஒரு ஆசிரியருக்கு முன்னால் தான் எல்லாம் தெரிந்ததை போன்று பாசாங்கு செய்ய முயற்சிக்கும் மாணவனைப் போன்றவர் என்று பராக் ஒபாமா கூறியிருந்தார். ஒபாமாவின் இந்த கருத்திற்கு சிவசேனா தலைவர் சஞ்சய்…

மேலும்...

பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்!

மும்பை (28 அக் 2020): இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த்த்தப்பட்ட வேண்டும் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சிவசேனா ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் காலதாமதம்  கூடாது என வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் உறுதியான முடிவை எடுக்கும் என எதிர் பார்ப்பதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை சீனாவின் உதவியுடன் மீண்டும் செயல்படுத்த மெஹபூபா…

மேலும்...
Modi-Shivsena

மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

மும்பை (09 ஆக 2020):உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய கடுமையான பாதிப்புக்களினால், பல நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் பொருளாதார பாதிப்பு, வேலையின்மை அதிகரிப்பு என மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இந்நிலை மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மக்கள் பலரும் தமது வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையைக்கூட நடத்த முடியாத அளவுக்கு ஒருவேளை சோற்றுக்குக் கூட கஷ்டப்பட்டு வரும் நிலைமைகளும் உருவாகி வருகின்றன. வைரஸ்…

மேலும்...

மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (07 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், நெருக்கடிக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிவசேனா சாடியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்களில் முடிவு பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்த நிலையில், 100 நாட்களை தாண்டி நெருக்கடி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் மகாபாரதத்தை விட மிகவும் கடினமானது….

மேலும்...

மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…

மேலும்...

இந்துத்வாவிற்கு மீண்டும் திரும்பிய உத்தவ் தாக்கரே!

லக்னோ (11 மார்ச் 2020): இந்துத்வாவை விட்டு நான் விலகவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ” இது மகாராஷ்டிர அரசு பணம் அல்ல, இது எனது அறக்கட்டளையிலிருந்து தரப்பட்டுள்ள…

மேலும்...