மோடியை புகழும் சீனா – சந்தேகம் கிளப்பும் ராகுல் காந்தி!

புதுடெல்லி (22 ஜூன் 2020): இந்திய வீரர்களை கொலை செய்துவிட்டு, இந்திய இடத்தையும் கைபற்றிக் கொண்டு, இந்திய பிரதமரை சீனா பாராட்டியுள்ளது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் தயார் படுத்தப்பட்டுள்ள்ன. இந்நிலையில், இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் கூறியதற்கு சீன பத்திரிகை பாராட்டு தெரிவித்து இருந்தது. அதை மேற்கோள் காட்டியுள்ள…

மேலும்...

எல்லையில் இந்தியா சினா இரு நாட்டு படைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்!

லடாக் (22 ஜூன் 2020): லடாக் கிழக்கு எல்லையில் இந்தியா சீனா படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு…

மேலும்...

உண்மை வெளியே வரும் வரை கேள்வி கேட்போம் – கமல்ஹாசன் அதிரடி!

சென்னை (21 ஜூன் 2020): மத்திய அரசிடமிருந்து உண்மை வெளியே வரும்வரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எல்லை விவகாரம் குறித்து கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ” எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?” மத்திய அரசு லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை…

மேலும்...

நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (21 ஜூன் 2020): “பிரதமர் நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல்…

மேலும்...

நாங்கள் பாஜக பக்கம் இருக்கிறோம்: ஸ்டாலின் – கொந்தளிப்பில் காங்கிரஸ்!

புதுடெல்லி (21 ஜூன் 2020): இந்திய சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் காங்கிரஸுக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை…

மேலும்...

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அப்படி பேசவில்லை- பிரதமர் அலுவலகம் விளக்கம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக திசை திருப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின. தொடர்ந்து, லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி…

மேலும்...

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர் – பிரதமருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், “20 இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீனா இடையே கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசு மீது திரு. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா திட்டமிட்டே தாக்‍குதல்…

மேலும்...

சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்!

கொல்கத்தா (20 ஜூன் 2020): சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் இன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர். லடாக் எல்லையில் சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சீனா மற்றும் அந்நாட்டு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகள்…

மேலும்...

சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை – பிரதமர் மோடி!

புதுடெல்லி (19 ஜூன் 2020): இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய- சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீன…

மேலும்...

இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்பவுள்ளேன் – சீனா எல்லையில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம்!

பாட்னா (17 ஜூன் 2020): சீனா இந்தியா இடையேயான மோதலில் உயிரிழந்த வீரர் அமன்குமார் சிங்கின் தம்பியையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பவுள்ளதாக அமனின் தந்தை தெரிவித்துள்ளார். பீகார் சமஸ்திபூர் மாவட்டத்தில் மொஹியுதீன் நகரில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமன் குமார். இவர் ஜூன் 15 ஆம் தேதி இரவு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களுக்கும் சீன இராணுவத்தின் (பி.எல்.ஏ) படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிர் இழந்தார். அமன் குமாருக்கு மனைவி மினு தேவி, தந்தை…

மேலும்...