கொரோனா வைரசும் திமுகவும் – பகீர் கிளப்பும் அமைச்சர்!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில்,கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட…

மேலும்...

நூறு வருஷம் வாழ அமைச்சர் சொல்லும் அடடே தகவல்!

சென்னை (12 மார்ச் 2020): மீன் சாப்பிட்டால் நூறு வருஷம் வாழலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என்பது வெறும் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். மதுரையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு…

மேலும்...

தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில்…

மேலும்...

ரஜினியும் கமலும் இணைய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

புதுடெல்லி (02 மார்ச் 2020): நடிகர் ரஜினியும் கமலும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்ளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம் ரஜினி – கமல் இணைந்தால் 16…

மேலும்...

அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக உலா வரும் போலி செய்தி!

சென்னை (18 பிப் 2020): அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக ஒரு போலி செய்தி ஒன்று உலா வருகிறது. குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயா பிளஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி போல் போட்டோ ஷாப் செய்தி ஒன்று உலா வருகிறது. “அதில் குடியுரிமை சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. திமுக தவறான பிரச்சாரம் செய்கிறது” என்பதாக அந்த செய்தி உள்ளது. ஆனால் ஜெயா பிளஸ் அந்த செய்தியை மறுத்துள்ளது. மேலும் இது…

மேலும்...

உண்மை ஒருநாள் வெளியே வரும் – ஊடகங்கள் மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (07 பிப் 2020): ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் தி.மு.க சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் இளைய அருணா இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின் ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது: “ஒருகாலத்தில் வைதீக திருமணங்களை நடத்தி வைப்பதற்கு புரோகிதர்களை தேடி அலையும் நிலை இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாகி சீர்திருத்தத் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இப்போதெல்லாம்…

மேலும்...

துரைமுருகனுக்கு திமுக தலைவர் பதவி – ஜெயக்குமார் கேள்வி!

சென்னை (23 ஜன 2020): திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பதிலளிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதையே நான் திருப்பிக் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில்…

மேலும்...

கொந்தளித்த அதிமுக – தடுமாறும் பாஜக!

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவோ, ரஜினிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை, உடையில்லாமல், செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும்…

மேலும்...

ரஜினிக்கு அதிமுக அமைச்சர் கண்டனம்!

சென்னை (21 ஜன 2020): ரஜினியின் பெரியார் குறித்த கருத்துக்கும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பெரியாரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட கழகம் மறுத்திருந்தும் மீண்டும் ஏன் பேசுகிறார். துக்ளக் பத்திரிகையில் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், ஏன் துக்ளக் பத்திரிகை ஆதாரத்தை காட்டவில்லை? சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆங்கில…

மேலும்...

பத்த வச்சுட்டியே பரட்ட – ரஜினியைக் கிண்டல் செய்த அமைச்சர்!

சென்னை (20 ஜன 2020): “பரட்டை பற்ற வைத்தது தமிழகம் எங்கும் பற்றி எரிகிறது!” என்று நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் பேசியதற்கு “ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துக்ளக் விழாவில்…

மேலும்...