டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிர்ச்சி!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம் பின்னணியில் சீன ஹேக்கர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் டெல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கம் தொடர்வதால் அங்கு பல்வேறு சேவைகள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரிலிருந்து நிறைய நோயாளிகளின் தரவுகளை எடுத்து அதனை டார்க் வெப் இணையத்திற்கு ஹேக்கர்கள் விற்பனை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஏராளமான அரசியல்வாதிகளின் மருத்துவ சிகிச்சை…

மேலும்...

டெல்லியில் 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள உவைசி கட்சி!

புதுடெல்லி (28 நவ 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலில் டெல்லியின் வெவ்வேறு சட்டமன்ற வார்டுகளில் AIMIM தனது 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசிய தலைநகரில் தனது கட்சியின் பொது பேரணிகளில் உரையாற்றிய அசாதுதீன் ஒவைசி, இங்குள்ள பல பகுதிகள் வளர்ச்சியடையவில்லை என்று கூறினார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஒவைசி கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும் டெல்லியின் வளர்ச்சிக்காக யாரும் உழைக்கவில்லை என்றும் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார்.

மேலும்...

அதிர்ச்சி தரும் அடுத்த வீடியோ லீக் – வெளியிட்ட பாஜக!

புதுடெல்லி (27 நவ 2022): டெல்லி பாஜக வெளியிட்டுள்ள அடுத்த வீடியோ டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோ அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வீடியோவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் சத்யேந்தர் ஜெயினை மசாஜ் செய்வது, அடுத்த வீடியோவில் சிறப்பு உணவுகள் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல்!

புதுடெல்லி(22 ஆக 2022): டெல்லி ஜந்தர் மாந்தரில் விவசாயிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து விவசாயிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விட்டுத்தனர். இதனையொட்டி டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக காஜிபூரில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். எனினும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் விவசாயிகள் திங்களன்று டெல்லி ஜந்தர் மந்தரை அடையத் தொடங்கியுள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) மற்றும்…

மேலும்...

மசூதி மற்றும் வீடுகள் இடிப்பு – மாணவர்கள் அமைப்பு போராட்டம்!

புதுடெல்லி (21 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் மற்றும் மசூதியை வலுக்கட்டாயமாக இடித்ததற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), சகோதரத்துவ இயக்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), அகில இந்திய புரட்சிகர மாணவர் அமைப்பு (AIRSO), Campus Front of India…

மேலும்...

பாஜக தலைவர் சுட்டுக்கொலை – டெல்லியில் பரபரப்பு!

புதுடெல்லி (21 ஏப் 2022): ஏப்ரல் 20, புதன்கிழமை அன்று டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர் ஜீது சௌத்ரி அவரது வீட்டிற்கு வெளியே இரவு 8:15 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, புதன்கிழமை இரவு 8:15 மணியளவில், ரோந்துப் பணியில் இருந்த அதிகாரிகள்,…

மேலும்...

தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி வாழ்கிறோம் தெரியுமா? – டெல்லிக்கு பாடம் நடத்திய நவாஸ்கனி!

சென்னை (20 ஏப் 2022): டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தகர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து…

மேலும்...

டெல்லி மசூதியை தாக்கி காவிக்கொடி ஏற்றிய இந்துத்துவாவினர் – முஸ்லீம் இளைஞர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் என்ற போர்வையில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தேசிய பாதுகாப்பு (என்எஸ்ஏ) வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு வருடம் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க அனுமதிக்கிறது. சமூக ஊடகங்களில் ஹிந்துத்துவவாதிகள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பகிரங்கமாக காண்பிக்கும் வீடியோக்கள் மற்றும் ஆத்திரமூட்டும்…

மேலும்...

டெல்லி கலவரம் – கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தியையொட்டி கலவரம் வெடித்ததாகக் கூறப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க என்டிஎம்சி இடிப்பு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதனை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, கபில் சிபல், பி.வி.சுரேந்திரநாத் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற பார்வைக்குக் கொண்டு சென்றனர். இதன் பேரில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னதாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில்…

மேலும்...

ஆளுநர் திமுக மோதல் – ஆளுநர் திடீர் டெல்லி பயணம்!

சென்னை (07 ஏப் 2022): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவி முன் நிலுவையில் உள்ளன. இதை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்’ என்று திமுக-வினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்…

மேலும்...