கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்குப் பக்க விளைவுகள்!

புதுடெல்லி (17 ஜன 2021): டெல்லியில் கோவிட் தடுப்பூசி போட்டுகொண்டவர்களில் 52 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செயல்படுத்தத் தொடங்கியது. இதுவரை மொத்தம் 1,65,714 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெல்லியில் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 52 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியைத் தவிர வேறு எந்த…

மேலும்...

ஹேப்பி நியூ இயருக்கு பதிலாக விவசாயிகள் இட்ட கோஷம்!

புதுடெல்லி (01 ஜன 2021): விவசாய விரோத சட்டங்களான வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 37வது நாளாக தொடர்கிறது. நேற்று முன் தினம் மத்திய அரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற 6ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் காரணமாக சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 2021ம் ஆண்டு பிறந்ததை அடுத்து நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியின்…

மேலும்...

அதானி அம்பானி நிறுவனங்களின் விற்பனை கடும் பாதிப்பு – கடுங் குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (25 டிச 2020): டெல்லியில் தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டதில் இதுவரை 32 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை திருப்திப்படுத்துவதற்காக மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை முன்வைத்திருந்தாலும், சட்டம் திரும்பப் பெறும் வரை தாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். ஆனால் சட்டத்தை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாகவே உள்ளது.

மேலும்...

நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் போராட்டத்திற்கு அழைப்பு – திணறும் டெல்லி!

புதுடெல்லி (30 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. கிளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது, மத்திய அரசு போராட்டத்தை நிபந்தனைகளுடன் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். “இந்த விவசாய…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தால் திணறும் மத்திய அரசு!

புதுடெல்லி (28 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மூன்றாம் நாளாக தீவிரமாக தொடர்ந்து வருகிறது. அரசு தீர்மானிக்கும் இடத்தில் போராடுவதால் எந்த பயனும் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலையிலேயே வேலைநிறுத்தம் தொடரும் என்றும் விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். இதனால் சிங்கூரில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க அதிகமான விவசாயிகள்…

மேலும்...

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (27 நவ 2020): வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி-யில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் மத்திய அரசு சட்டத்தை வாபஸ் பெறவில்லை. இதனை அடுத்து நேற்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர். இதற்கிடையே, எதிர்வரும்…

மேலும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் கண்ணீர் புகை வீச்சு – தடுப்புகள் உடைப்பு!

புதுடெல்லி (26 நவ 2020): வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர். #WATCH Farmers' protest continues at Shambhu border, near Ambala (Haryana) as police stop them from proceeding to…

மேலும்...

நவம்பர் 30 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

புதுடெல்லி (06 நவ 2020): டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இந்நிலையில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதுபற்றி அமைச்சர்…

மேலும்...

நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (24 அக் 2020): சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் முதல் விதிக்கப்பட்ட தற்காலிக பயணத் தடையில் இருந்து சில வகை விலக்கு அளிக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது….

மேலும்...

டெல்லி துணை முதல்வர் உடல் நிலை கவலைக்கிடம்!

புதுடெல்லி (25 செப் 2020): கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனா உடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மணிஷ் சிசோடியா மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்...