பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களை அணுக தமிழக அரசு முடிவு!

சென்னை (01 ஜூன் 2020): பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை (12 மே 2020): கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ், காரணமாக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியிருந்த நிலையில், இறுதி பாடத்தின் போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,…

மேலும்...

நோன்பு கஞ்சிக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது – இந்து முன்னணி நீதிமன்றத்தில் மனு!

சென்னை (24 ஏப் 2020): நோன்பு கஞ்சிக்காக அரிசி வழங்குவதை அரசு நிறுத்தக்கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு நாளை முதல் இந்தியா முழுவதும் தொடங்குகிறது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் என தெரிவித்தது. அதன்படி, 2895 பள்ளிவாசல்களுக்கு 5440 மெட்ரிக் டன்…

மேலும்...

திங்கள் முதல் பணிக்கு வர அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

சென்னை (19 ஏப் 2020): தமிழகத்தில் நாளை (20 ஏப்ரல் திங்கள் கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:- அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக்…

மேலும்...

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – தமிழக அரசு பதில்!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பராலை கட்டுப்படுத்த நாடெங்கும் மே. 3 ஆம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில துறைகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு ஏப்ரல் 15 அன்று வெளியிட்ட ஆணையின்படி, ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌…

மேலும்...

தமிழக அரசின் உத்தரவு பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும் – ஜவாஹிருல்லா கண்டனம்!

சென்னை (12 ஏப் 2020): “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் தன்னார்வலர்கள் உணவு அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது ஏழை கூலித் தொழிலாளிகளின் பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும்,” என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல்…

மேலும்...

அறிவிப்பை திடீரென திரும்ப பெற்றது தமிழக அரசு!

சென்னை (07 ஏப் 2020): இரும்பு, உரம், காகிதம் உட்பட 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதைத் திரும்பப் பெறுவதாக இப்பொழுது அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை இரும்பு ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், உரம், ஜவுளி (பின்னாலாடைத் தொழில் தவிர்த்து), சர்க்கரை ஆலைகள், கண்ணாடித்…

மேலும்...

கொரோனா – கேரள முதல்வரின் திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா!

சென்னை (21 மார்ச் 2020): கொரோனாவை எதிர் கொள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ள திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “மார்ச் 22 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்….

மேலும்...

தமிழக அரசின் ரூ. 4,200 கோடி இமாலய ஊழல் – தொழிலாளர் சங்கம் கண்டனம்!

சென்னை (09 மார்ச் 2020): தமிழக அரசின் கிராமப்புர வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஊழலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாய தொழிலாளர் சங்கம் வரும் 10 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்க வும், குறிப்பாக வறுமையிலிருந்து மக்களை மீட்கவும் நாட்டிலுள்ள ஏழை மற்றும் பணக்கார மக்களிடையே உள்ள இடை வெளியை குறைக்கவும் கொண்டு வரப்பட்ட சட்டம் மகாத்மா காந்தி தேசிய…

மேலும்...

தமிழக பட்ஜெட்டின் (2020) முக்கிய அம்சங்கள்!

சென்னை (14 பிப் 2020): 2020- 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார். பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது. கல்வித் துறைக்கு ரூ.34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும்…

மேலும்...