க. அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பலனில்லை – ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சையில் பலனில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரிக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர…

மேலும்...

புற்றுநோய்க்கு உதவி கேட்ட பாஜக பிரமுகர் – உடனே உதவுவதாக அறிவித்த திமுக எம்பி!

சென்னை (06 மார்ச் 2020): தனது உறவினரின் புற்று நோய் சிகிச்சைக்கு உதவி கேட்ட பாஜக பிரமுகருக்கு திமுக எம்பி செந்தில்குமார் உதவி செய்ய முன்வந்துள்ளார். பாஜக பிரமுகரும், ட்விட்டரில் அதிமுக எம்பி செந்தில்குமாருடன் கருத்துப் போரில் ஈடுபடுபவருமான எல்.ஜி.சூர்யா என்பவர் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். அதில், என் நண்பரின் அம்மாவிற்கு முஸினஸ் கார்சினோ வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவரின் பெயர் பிரேமலதா. பிரேமலதா அம்மா தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை…

மேலும்...

கரூரில் கலகலப்பு – எடப்பாடியை வரவேற்ற திமுக -VIDEO

கரூர் (06 மார்ச் 2020): தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கரூரில் வரவேற்க அதிமுக கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் திமுக கொடியும் இடையே பறந்து கலகலப்பூட்டியது. தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கரூருக்கு வியாழன் அன்று வந்தார். கரூர் அடுத்த காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 ஆம் தேதி அன்று தமிழக…

மேலும்...

துரைமுருகன் ஆலைக்கு சீல்!

காட்பாடி (02 மார்ச் 2020): காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மேலும்...

ஸ்டாலினுக்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம்!

சென்னை (02 மார்ச் 2020): ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடம் அளிக்காததால் திமுக தலைவர் ஸ்டாலின் மீது முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ராஜ்யசபா எம்.பி.யாக திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த முறையே ராஜ்யசபா எம்.பி.யாவார் என எதிர்பார்க்கப்பட்ட என்.ஆர். இளங்கோவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சரான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜை…

மேலும்...

எம்பி பதவி தரவில்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் – நாடார் சங்கம் எச்சரிக்கை!

சென்னை (01 மார்ச் 2020): திமுக, அதிமுக இரு கட்சிகளிலும் டெல்லி மேல்சபையில் நாடார் சமூகத்திற்கு இடம் அளிக்க வேண்டும் என்று தெஷ்ணமாற நாடார் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26-ந்தேதி நடக்கிறது. ஆறு இடங்களுக்கு 6-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் தேர்தல் நடக்கும். இல்லையேல் போட்டியின்றி 6 பேர் அறிவிக்கப்பட்டு விடுவார்கள். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற மார்ச் 6-ந்தேதி முதல் 13-ஆம் தேதி வரை…

மேலும்...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்!

சென்னை (28 பிப் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 97 வயதாகும் க.அன்பழகன் மூச்சுத் திணறல் பிரச்னையால், கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், புதன் கிழமை இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான…

மேலும்...

திமுகவின் குடியாத்தம் எம்.எல்.ஏ மரணம் – திமுகவினர் அதிர்ச்சி!

சென்னை (28 பிப் 2020): குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் காலமானார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில்தான் குடியாத்தம் தொகுதியில் இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு திமுகவினர்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (27 பிப் 2020): திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பிபி சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி சாமி, 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அக்கட்சியின் மீனவர் அணி செயலாளராக இருந்த சாமி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி தனது 57-வது வயதில் அவர் காலமானார். சாமியின் மறைவுக்கு…

மேலும்...

அதிமுகவுக்கு எச்.ராஜா பகிரங்க மிரட்டல்!

திருவண்ணாமலை (27 பிப் 2020): சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் தமிழக ஆட்சி கவிழும் என்று எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, “. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அப்படி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். திமுகவை இந்து விரோத கட்சியே அல்ல என்று…

மேலும்...