ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட்!

துபாய் (17 ஜன 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் உட்பட பல பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மங்கலான கால சூழ்நிலையால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கும், கோவிட் 19 தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம்!

துபாய் (12 ஜன 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சங்கங்களும் கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியர்களுக்கு உதவி வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினர் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் தடுப்பூசி பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

மேலும்...

சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது. சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை…

மேலும்...

துபாயிலிருந்து புறப்படும் விமான சேவைகள் இடமாற்றம்!

துபாய் (25 டிச 2020): கோவிட் காட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக துபாயிலிருந்து புறப்படும் விமானங்கள் ராஸல் கைமாவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சில ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட்டன. துபாயிலிருந்து கொச்சி, கோழிக்கோடு மற்றும் மங்களூர் ஆகிய விமானங்களுக்கு இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிளுக்கான விமானங்களும் இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்படும். இதன் ஒருபகுதியாக அபுதாபி, துபாய் மற்றும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு துபாயில் கைதிகள் விடுதலை!

துபாய் (27 நவ 2020): ஐக்கிய அரபு எமிரேட் டிசம்பர் 2 தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சயீத் அல் காசிமி, சிறைகளில் இருந்து 219 கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு முழு ஆதரவையும் தருவதாக…

மேலும்...

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்!

துபாய் (01 நவ 2020): இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை துபாய் நகரெங்கும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி துபாயில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், நகரின் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

மேலும்...

கின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்!

துபாய் (30 அக் 2020):துபாயில் உள்ள ஒரு மரக் கப்பல் உலகின் மிக நீளமான மர கப்பலுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய கப்பல் கட்டட தயாரிப்பு நிறுவனமான ஒபைட் பின் ஜுமா பின் ஜூலம் நிறுவனம் படைத்துள்ளது. உபைட் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 300 அடி நீளமும் 66 அடி அகலமும் கொண்டது. துபாய் டிபி வேர்ல்ட் அருகே நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை…

மேலும்...

துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

துபாய் (19 அக் 2020): விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் துபாய் வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் துபாய் விமான நிலையத்தில் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.. துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச…

மேலும்...

துபாய் வரும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை!

துபாய் (17 அக் 2020): ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன . துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் வரும்போது திரும்பிச் செல்லும் வகையில் உள்ள விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் புறப்பட்ட…

மேலும்...

ஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்!

துபாய் (29 ஆக 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிவீரர்களும் பயிற்சிக்காக அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணியும் சமீபத்தில் அமீரகம் சென்றடைந்தது. தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த சூழலில், சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், அணி ஊழியர்கள்…

மேலும்...