Durai Murugan

பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்த துரைமுருகன் – நாங்க எல்லாரும் ஒன்றுதான் என்று பதில்!

புதுடெல்லி (07 ஜூலை 2021): டெல்லியில் அமைச்சர் துரைமுருகனை தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த நிலையில், “தமிழ்நாட்டைவிட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார். அண்மையில் தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடக அரசு கட்டியிருந்த யார்கோல் அணை விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். இது விவாதத்திற்குள்ளான நிலையில், நேற்று (06.07.2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை…

மேலும்...

துரைமுருகன், கிஷோர்,மதனை தொடர்ந்து அடுத்து சிக்கும் யுடூபர்!

சென்னை 914 ஜூன் 2021): துரைமுருகன், கிஷோர்,மதன் ஆகிய சமூக வலைதள பிரபலங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக வலைதள யூசர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சமூக ஊடக தளங்கள் மக்களின் அரசியல் கொள்கையையும், அன்றாட வாழ்க்கையையும் மாற்ற கூடிய சக்தி கொண்ட ஊடகமாக மாறிவிட்டது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய வரவான கிளப் ஹவுசில் நடக்கும் விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் ஆதரவாளரும் யுடூப்பருமான சாட்டை துரைமுருகன் திருச்சியில் வினோத்…

மேலும்...
Durai Murugan

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டும் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (08 ஏப் 2021): திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இ தையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார். எனினும்…

மேலும்...
Durai Murugan

திமுக நிர்வாகி திடீர் நீக்கம் -பரபரப்பு பின்னணி!

சென்னை (14 பிப் 2021): திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கடுமையாக விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தின் திமுக முகமாக இருந்து வருகிறார். திமுகவில் திருவண்ணாமலை மாவட்டம் தெற்கு வடக்கு என்று பிரிக்கப்பட்டபோது எ.வ.வேலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்து வருகிறார்….

மேலும்...

கதறி, கண்ணீர் விட்ட துரைமுருகன் – அப்படி என்ன சொல்லிவிட்டார்,ஸ்டாலின்?

சென்னை (09 செப் 2020): திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கலைஞர் மகிழ்ச்சி அடைவார். துரைமுருகன், டி.ஆர்.பாலுவை பார்க்கும்போது கலைஞரின் முகம் தான் எனக்குத் தெரிகிறது. அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்தப் பதவி…

மேலும்...

திமுகவில் போட்டி போடும் டி.ஆர்.பாலு – துரைமுருகன்!

சென்னை (03 செப் 2020): திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு மனுதாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு…

மேலும்...
Durai Murugan

“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்!

சென்னை (07 ஆகஸ்ட், 2020): திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஏக்கத்திலும் கோபத்திலும் தி.மு.க.-வில் கலகத்தை உருவாக்க நான் முனைவது போல் தினமலர் நாளிதழில் வெளியான செய்தி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- ‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் உருவாக்க நான் முனைவது போல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்தியாக தினமலர் (7.08.2020)…

மேலும்...

துரைமுருகன் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகல் – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

சென்னை (16 மார்ச் 2020): திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதால் துரைமுருகன் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது குறித்த அறிவிப்பில், கடந்த 15-3-2020 அறிக்கையின் வாயிலாக, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 16-3-2020 கடிதத்தின் வாயிலாக…

மேலும்...

திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரை முருகன் போட்டி!

சென்னை (16 மார்ச் 2020): திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது குறித்த அறிவிப்பில், கடந்த 15-3-2020 அறிக்கையின் வாயிலாக, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும்…

மேலும்...

துரைமுருகன் ஆலைக்கு சீல்!

காட்பாடி (02 மார்ச் 2020): காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மேலும்...