ஒரே நாடு ஒரே சீருடை – பிரதமர் மோடி பரிந்துரை!

புதுடெல்லி (28 அக் 2022): நாடு முழுவதும் காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் “ஒரே தேசம், காவல்துறைக்கான…

மேலும்...

திருச்சி போலீசை கொலை செய்தது என்? – கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்!

திருச்சி (23 நவ 2021): சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொன்றது  குறித்து கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான மணிகண்டன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும்…

மேலும்...

கர்ப்பிணிப் பெண்ணை சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி!

ஒடிசா (30 மார்ச் 2021): ஒடிசாவில் கர்ப்பிணிப் பெண்ணை மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து சித்ரவதை செய்த சப்-இன்ஸ்பெக்டரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்துள்ளார். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் குருபாரி என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவர் விக்ரம் பிருலி-யும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் போலீஸ் ஹெல்மெட் பரிசோதனை நடத்தி வந்தனர். பரிசோதனையின்போது வாகனம் ஓட்டிவந்த விக்ரம் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் அவர் மனைவி குருபாரி உடல்நலக் காரணங்களால்…

மேலும்...

இளம் பெண்ணை கர்ப்பமாக்கி சீரழித்த உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு!

மயிலாடுதுறை (30 ஆக 2020): இளம்பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்பலத்தை சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். 29 வயதான இவர் சப் இன்ஸ்பெக்டராக 2017 ஆம் ஆண்டு மணல்மேடு காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, அப்பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற தனியார் நிறுவனத்தில் பனியாற்றிவந்த இளம்பெண் ஒருவருடன் முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு இருவரும் பழகினர். பிறகு…

மேலும்...

ஊரடங்கில் பெண் போலீசின் தில்லாலங்கடி வேலை!

சீர்காழி (19 ஏப் 2020): ஊரடங்கிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கியதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கின் போது அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தனது கணவர் சோமசுந்தரரை அழைத்துக் கொண்டு சீர்காழி தென் பாதி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாமூல் வசூல் செய்துள்ளார். மேலும் தனது காவல் எல்லையைத் தாண்டி…

மேலும்...

பால் வாங்க வெளியில் சென்றவர் போலீஸ் தாக்குதலில் மரணம்!

கொல்கத்தா (26 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் பால் வாங்க வெளியில் சென்றவர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

பாஜக தலைவர்கள் மீது எப்போது வழக்கு பதிவு செய்வீர்கள்? முழு டெல்லியும் எரிந்த பிறகா?: நீதிபதி சரமாரி கேள்வி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு முன்பு வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான முரளிதரன் தலைமையிலான அமர்வில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இந்த வழக்கில் தான் கேட்கும் அனைத்து…

மேலும்...

CAA எதிர்ப்பு போராட்ட வன்முறை – போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

லக்னோ (25 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் போலீசார் நடத்திய கொலை வெறி தாக்குதலை தொடர்ந்து உத்திர பிரதேசத்தில் பலர் உயிரிழந்தனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். போலீசாரே முன்னின்று நடத்திய இந்த வன்முறையில் பல வாகனங்கள்,…

மேலும்...
shaheen-bagh

ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது பழி போட நினைத்து சிக்கிக் கொண்ட போலீஸ்!

புதுடெல்லி (22 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் சாலைகளை ஆக்கிரமித்திருப்பது போராட்டக் காரர்கள் என்று கூறிய போலீஸ் தற்போது அது பொய் என்பது நிரூபிக்கப்பட்டதுள்ளது. குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதில் ஷஹின் பாக் போராட்டம் முதன்மையாக கருதப்படுகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறத்தியும் ஷஹின் பாக்கில் அமைதி வழியில் தொடர்…

மேலும்...

சென்னை போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து, மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...