டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை – மக்கள் நீதி மய்யம்!
சென்னை (18 ஆக 2020): டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை என்று மக்கள் நீதிமய்யம் தொழிலாளர் அணி தெரிவித்துள்ளது, இதுகுறித்து அதன் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 நோய் தொற்று காரணமான ஊரடங்கு ஐந்தாவது மாதத்தை கடந்து செல்லவிருக்கும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு கிஞ்சித்தும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் கடந்த ஐந்து மாதங்களாக குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கி விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்…