தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதிலும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களையும் திருப்திபடுத்த வேண்டிய சூழலில் கட்சித் தலைமை உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு : தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் திறந்த மடல்!

சென்னை (29 நவ 2022): தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திறந்த மடல் எழுதியுள்ளர். அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நோக்கி இதுதான் தார்மீகமா? பண்பாடா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கே.எஸ். ராதாகிருஷ்ணன் குறையொன்றும் இல்லை என்ற தலைப்பில் தொடராக திறந்த மடல் கட்டுரை எழுதி வருகிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு… இறுதியாக சொல்ல வேண்டிய சில விடயங்கள்… வைகோ போன்றவர்களால் என்னுடைய அரசியல் பயணத்தில் தடை…

மேலும்...

தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை – ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (30 ஆக 2022): தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 21 துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்த பின் 19 பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது….

மேலும்...

ஆளுநர் மீது கருப்புக்கொடி வீசியது உண்மையா? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (20 ஏப் 2022): ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசியதாக கூறப்படும் நிலையில் இதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்றைய தினம் மயிலாடுதுறை சென்றிருந்தார். ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ், விசிக, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது ஆளுநரின் கான்வாய்…

மேலும்...

சொத்து வரியை உயர்த்தியது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (06 ஏப் 2022): சொத்துவரியை உயர்த்தியது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்திருந்ததது. மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பற்றாக்குறையால் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றக்கூட சிரமம் ஏற்பட்டது. ஆனால் இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்து அரசிடம் நிதியை எதிர்பார்ப்பார்கள். சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை. ஏழை-எளிய,…

மேலும்...

எடப்பாடி புலம்பல் – தங்கம் தென்னரசு பதில்!

புதுடெல்லி (02 ஏப் 2022): துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள்கள் பயணமாக டெல்லி கிளம்பிச் சென்றார். ஏப்ரல் 2ஆம் தேதி இன்று திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடி , ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என பலருக்கும் கொடுத்து விழாவுக்கு வரவேற்றுள்ளார். முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்து பேசியது போல் டெல்லி பயணத்தையும்…

மேலும்...

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2022): உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு ஒன்றிய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் வரவேற்றார். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும்…

மேலும்...

சட்டத்திற்கு விரோதமான செயலை தடுத்தேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (12 மார்ச் 2022): ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்…

மேலும்...

செந்தில் பாலாஜி காட்டில் மழை!

கோவை (11 மார்ச் 2022): தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கோவை மாவட்ட வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார் அவர். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது…

மேலும்...

என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் பாய்ச்சல்!

சென்னை (17 பிப் 2022): “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் மீது முதல்வர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு குறித்து பேசி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட காரணமாக இருந்த கட்சி மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த தி.மு.க….

மேலும்...