தேர்தல் ஆணையத்திற்கு மோடி ஆணையம் என பெயர் வைக்கலாம் – மம்தா சாடல்!

கொல்கத்தா (11 ஏப் 2021): தேர்தல் ஆணையத்தின் பெயரை ‘மோடி ஆணையம் ‘ என்று மாற்ற வேண்டும் என்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரியுள்ளார். மேற்கு வங்கத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் கலவர பூமியாகியுள்ள கூச் பெஹார் மாவட்டத்திற்கு எந்த அரசியல் தலைவரும் 72 மணி நேரம் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அங்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு வருவதாக மம்தா பானர்ஜி அறிவித்ததை அடுத்து…

மேலும்...
Mamta-Banerjee

வாக்கு எந்திரத்தில் பாஜகவுக்கே விழுகிறது – மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்!

கொல்கத்தா (27 மார்ச் 2021): மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே விழுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 30 தொகுதிகளிலும் 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த…

மேலும்...

பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு – ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (20 மார்ச் 2021): மேற்குவங்கத்தில் புதிதாக பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்‍கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு அக்‍கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்‍கும், பா.ஜ.க.வுக்‍கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3-ம் முறையாக ஆட்சியை கைப்பற்ற செல்வி மம்தாவும், மம்தாவின் அரசை அகற்ற பா.ஜ.க.-வினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், திரிணாமூல் காங்கிரசிலிருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில்…

மேலும்...

வெடிகுண்டு வீச்சில் அமைச்சர் ஜாகிர் உசைன் படுகாயம் – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

கொல்கத்தா (18 பிப் 2021): மேற்கு வாங்க தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகிர் உசைன் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டார். மம்தா அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஜாகிர் உசைன் கொல்கத்தா நகருக்கு செல்வதற்காக நிம்திதா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜாகிர் உசைனை…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை…

மேலும்...

பாஜகவின் வெற்றிக்கு உதவுவதே உவைஸிதான் – பாஜக எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (14 ஜன 2021): பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியே கரணம் என்பதாக, பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். பிகாரில் தேஜஸ்வி யாதவின் வெற்றியை தட்டிப் பறித்தது உவைஸியே என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் சாக்ஷி மகாராஜ் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வாங்க தேர்தலிலும் உவைஸி பாஜகவின் வெற்றிக்கு உதவுவார். என்பதாக சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் சாக்ஷி மகாராஜ் தெரிவிக்கையில்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் 200 இடங்களை பாஜக வெல்ல தவறினால் பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்ய தயாரா?

புதுடெல்லி (23 டிச 2020); : மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை வெல்லத் தவறினால் ராஜினாமா செய்வோம் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்குமாறு பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். “வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 100 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். பாஜகவின் வெற்றி அதற்கு மேல் இருந்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகுவேன்.” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில்…

மேலும்...

மேற்கு வங்க அரசியலில் தன் சித்து வேலையை தொடங்கிய பாஜக – திரிணாமுல் காங்கிரஸில் விரிசல்!

கொல்கத்தா (17 டிச 2020): திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுவேந்து ஆதிகாரி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்னர் சுவேந்து ஆதிகாரி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாம் செய்துள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுவேந்து ஆதிகாரி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், புருலியா, பாங்குரா மற்றும் மேற்கு மிட்னாபூர் ஆகிய பகுதிகளின் பொறுப்பாளராகவும் , மேலும் அந்த…

மேலும்...

பாஜக மம்தாவை கொலை செய்ய முயற்சி – அமைச்சர்கள் பகீர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (13 டிச 2020): தேர்தலில் தோல்வியை சந்தித்தால் பாஜகவினர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஜே.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தியது பாஜக சதி என்றும் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சுப்ரதா முகர்ஜி கூறினார். கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக…

மேலும்...
Mamta-Banerjee

மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் பிறந்த நிலம், பாஜகவுக்கு இடமில்லை – மம்தா பானர்ஜி தாக்கு!

கொல்கத்தா (27 நவ 2020): மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் ரவீந்திர நாத் தாகூர் போன்றோர் பிறந்த நிலம், மதவாத சக்தியான பாஜகவுக்கு இங்கு இடமில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாசருல் இஸ்லாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் நிலம். குஜராத் வகுப்புவாத கலவரங்கள் நடக்கும் நாடு அல்ல. மம்தா மேலும் கூறினார் பாஜக ஒரு வெளி கட்சி என்றும், வெளியாட்களுக்கு வங்காளத்திற்கு இடமில்லை மேற்கு…

மேலும்...