மோடிக்கு கொரோனா ஆதரவு – எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

சென்னை (10 மார்ச் 2020): கொரோனா பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எஸ்வி சேகர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும்…

மேலும்...

யாரும் நம்பாதீங்க – பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் எதனையும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ‘ஜன் ஆஷாதி யோஜனா’ பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சனிக்கிழமை பேசினார். அப்போது அவர், ‘கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும். கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல்…

மேலும்...

கோமாளி விளையாட்டு விளையாட வேண்டாம் – மோடியை சாடிய ராகுல் காந்தி!

பதுடெல்லி (04 மார்ச் 2020): கோமாளி போல் விளையாடி இந்தியர்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று ராகுல் காந்தி மோடிக்கு ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “உங்களது சமூக ஊடகக் கணக்குகளை வைத்துக் கொண்டு கோமாளி போல் விளையாடி இந்தியாவின் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்தியா நெருக்கடியான ஒரு சூழலை…

மேலும்...

மோடியின் அழைப்பை ரத்து செய்ய வேண்டும் – வங்க தேசத்தில் வலுக்கும் போராட்டம்!

டாக்கா (03 மார்ச் 2020): இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று வங்க தேச அரசை எதிர்த்து டாக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லியில் சென்ற வாரம் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வங்க தேசத்தின் தந்தை என அழைக்கப்படும் சேக் முஜிபுர்…

மேலும்...

வெறுப்பைதான் நீங்கள் கைவிட வேண்டும் சமூக வலைதளங்களை அல்ல – மோடிக்கு ராகுல் அட்வைஸ்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற எண்ணுவதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார். மோடியின் இந்த அறிவிப்பை…

மேலும்...

சமூக வலைதளங்களிலிருந்து மோடி விலகல் – திடீர் அறிவிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் தாம் விலகத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார். உலகின் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட மோடி எதற்காக சமூகதளத் தொடர்புகளைக் கைவிட வேண்டும்…

மேலும்...

பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்!

புதுடெல்லி (29 பிப் 2020): பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. சுபாங்கர் சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமை சான்றிதழ் குறித்து கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், “பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை. காரணம் அவர் பிறப்பிலேயே இந்தியர்” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.. மேலும் பிரதமரின் ஆலோசகர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்திய குடியுரிமை…

மேலும்...

பிஜேபியின் பொதுச் செயலாளர் அமெரிக்காவுக்கு மிரட்டல்!

புதுடெல்லி (28 பிப் 2020): பிஜேபியின் பொதுச் செயலாளர் சந்தோஷ், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி ஸான்டர்ஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “உங்களது தேர்தலில் புகுந்து தில்லுமுல்லு செய்வோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புது டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்திற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருந்தார். அதைக் கண்டித்து பெர்னி ஸான்டர்ஸ் கடுமையான முறையில் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்திருந்தார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியிருந்த பத்திரிகைச் செய்தியைச்…

மேலும்...

தமிழகத்தில் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் பயணம் – மோடிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (26 பிப் 2020): தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில், ஹஜ் புனித பயணம் செல்வதற்கு, மாநில ஹஜ் கமிட்டி வாயிலாக, 6,028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஏழு குழந்தைகளும் அடக்கம். இவர்களில், 3,736 பேருக்கு மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால், பல…

மேலும்...

ட்ரம்ப், மோடி பேசிக்கொண்டிருந்தபோது ஸ்டேடியத்திலிருந்து கலைந்து சென்ற மக்கள் – வீடியோ!

அஹமதாபாத் (24 பிப் 2020): குஜராத்தில் அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மோடி பேசிக்கொண்டு இருந்தபோது பொதுமக்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்பும் உரையாற்றினர். ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். அப்போது, “எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த…

மேலும்...