குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப்படம் இரண்டாம்பாகம் இன்று வெளியாகிறது!

புதுடெல்லி (24 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பாகிறது. ‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பெயரில் பிபிசியின் ஆவணப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. வெளியான நாளில் இருந்து, இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளில் பெரும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை பிபிசி இன்று ஒளிபரப்புகிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என பிபிசி அறிவித்துள்ளது. பிபிசியின் இந்த…

மேலும்...

அடுத்த பிரதமர் யார்? – அமித்ஷா பதில்!

புதுடெல்லி (18 ஜன 2023): பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலைமையும், நட்டாவின் அமைப்புத் திறமையும் பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று அமித் ஷா கூறினார். 2023ல் ஒன்பது மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையும், அடுத்த லோக்சபா தேர்தலையும் நட்டா தலைமையில் பா.ஜ., சந்திக்கும்.நட்டா தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக அமித்ஷா கூறினார். குஜராத்தில்…

மேலும்...

குஜராத் மாடலை தமிழ்நாட்டில் பின்பற்ற திமுக எம்.எல்.ஏ பரிந்துரை!

சென்னை (16 ஜன 2023): “குஜராத் சட்டசபை போல தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாம்!” என மைலாப்பூர் திமுக எம்.எல்.ஏ வேலு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குஜராத் சட்டமன்றத்தின் முகப்பில் குஜராத் மாநிலத்தில் வரைபடம் பொறிக்கப் பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாமே? குஜராத் மாடலை சில விஷயங்களில் பின்பற்றலாம். பாஜகவினர் தவறு என சொல்வார்களா என்ன?” என பதிவிட்டுள்ளார். “குஜராத் மாடல்” என்ற சொல்லை வைத்தே பிரதமர்…

மேலும்...

பிரதமர் மோடியின் தாய் காலமானார்!

அகமதாபாத் (30 டிச 2022): பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி காலமானார் உடல் நலக்குறைவால் குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி இன்று (30 டிச 2022) வெள்ளிக்கிழமை காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழங்கப்பட்ட கல்வித் தொகை நிறுத்தப்பட்டதால் ஐந்தரை லட்சம் சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...

பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு – அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

சென்னை (01 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்தார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். இந்நிலையில் இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது…

மேலும்...

71000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!

புதுடெல்லி (22 நவ 2022): நாட்டின் 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார். இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த வேலைவாய்ப்பு கண்காட்சி. காலை 10.30 மணிக்கு பிரதமர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் குறித்தும் அவர் பேசுவார். ஆர்வமுள்ளவர்களுக்கான ஆன்லைன் பயிற்சித் திட்டமான கர்மயோகி பிரரம்த் திட்டத்தையும் பிரதமர்…

மேலும்...

ஒரே நாடு ஒரே சீருடை – பிரதமர் மோடி பரிந்துரை!

புதுடெல்லி (28 அக் 2022): நாடு முழுவதும் காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் “ஒரே தேசம், காவல்துறைக்கான…

மேலும்...

பெண்கள் மீதான மரியாதை இதுதானா? – மோடி மீது மல்லிகார்ஜுன் கார்கே கடும் விமர்சனம்!

புதுடெல்லி (21 அக் 2022): பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், “பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை பாஜக கேபினட் அமைச்சர் நியாயப்படுத்துகிறார், மற்றொரு கற்பழிப்பு குற்றவாளியின் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை என்று பிரதமர் போதித்தது இதுதானா?’ என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்….

மேலும்...

சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி (03 அக் 2022): சிறுபான்மையினர் நலத்துறையை மத்திய அரசு ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறையை 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மை விவகாரங்கள் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி அரசில் ஒரே முஸ்லீம் முகமான…

மேலும்...