இதுதான் குஜராத் மாடல் – கொரோனா உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான்: ராகுல் காந்தி!

புதுடெல்லி (16 ஜூன் 2020): நாட்டில் குஜராத் மாநிலத்திலேயே கொரோனா உயிரிழப்புகள் அதிகம் காணப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக குஜராத் மாடலை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை கைபற்றியது. ஆனால் பல விவகாரங்களில் குஜராத்தின் உண்மை முகம் அம்பலப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான் என்று ராகுல் காந்தி புள்ளி விவரங்களுடன் விவரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில்…

மேலும்...

நம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து – ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி (27 மே 2020): கொரோனா பரவல் மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி முக்கிய வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஹார்வோர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் இயக்குநர் அஷீஷ் ஷாவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவிற்கான தடுப்பு மருந்து குறித்து ராகுல் காந்தியிடம் பேசிய அஷீஷ் ஷா, கொரோனா தடுப்பில் மூன்று தடுப்பு மருந்துகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இவை சீனா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றில் தயாரிக்கும்…

மேலும்...

ஊரடங்கால் ஒரு பலனும் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி (26 மே 2020): கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை. கொரோனா பாதிப்பை…

மேலும்...

கொரோனா ஆரூடம் கூறிய நிதி அயோக் அமைப்பினர் பெரிய மேதைகள் – ராகுல் காந்தி கிண்டல்!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா பற்றி சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது நிதி ஆயோக்‍ அமைப்பு. “தேசிய ஊரடங்கு நடவடிக்கையால், இந்தியாவில் மே 16 ஆம் தேதி முதல் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இருக்‍காது!” என கணிப்பு வெளியிட்ட நிதி ஆயோக்‍ அமைப்பை திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேசிய ஊரடங்கை அமல்…

மேலும்...

இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுரம் ராஜன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (30 ஏப் 2020): ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார விளைவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விளைவுகள், சந்திக்க வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்து திரு. ராகுல் காந்தி, ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், “ கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல்…

மேலும்...

பண மோசடி செய்தவர்களை மறைத்தது ஏன்? பாஜகவின் கூட்டாளிகள் என்பதாலா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (29 ஏப் 2020): நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து ராகுல் காந்தி பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை…

மேலும்...

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி (27 ஏப் 2020): நாட்டில் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்‍கு 40 ஆயிரம் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், குறைந்தபட்சம் நாள்…

மேலும்...

கொரோனா பரவலால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் – ராகுல் காந்தி!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா பரவலால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “வளைகுடா நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு அவர்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும்...

செய்ய வேண்டியதை விட்டு கை தட்டுவதும் விளக்கேற்றுவதும் சரியா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (04 ஏப் 2020): போதிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் மக்களைக் கை தட்ட வைப்பதும், விளக்கேற்ற வைப்பதும் கரோனா பிரச்னைக்குத் தீர்வைத் தராது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் போராட்டத்தில் இந்தியா போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. மக்களைக் கை தட்டவைப்பதும், வானத்தை நோக்கி ஒளி எழுப்பச் செய்வதும் பிரச்னையைத் தீர்க்காது” என்றார். இந்தியாவில் பத்து லட்சத்தில் 29…

மேலும்...

பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்!

புதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சில வளா்ந்த நாடுகள் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், இந்தியாவிலோ நிலைமை வேறுபட்டதாகும். நாடு தழுவிய ஊரடங்கு தவிர இதர பல்வேறு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டிலுள்ள ஏழை மக்கள் தினசரி வருமானத்தையே…

மேலும்...