இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக லடாக்கில் பாலம் கட்டும் சீனா!

லடாக் (04 ஜன 2022): லடாக்கில் அத்து மீறும் சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் மீது பாலம் கட்டும் செயற்கைக்கோள் காட்சி. புவி-உளவுத்துறை நிபுணரான டேமியன் சைமன் மூலம் பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி பாங்கோங் ஏரியின் இருபுறங்களையும் இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பாலம் அங்கு கட்டப்படுவதால், அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை நடந்தால், அதிவேகப் படைகளையும், ஆயுதங்களையும் குவிக்க…

மேலும்...

இந்திய எல்லையில் மீண்டும் படைகளை குவிக்கும் சீனா!

லடாக் (29 ஜூன் 2020): கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் மீண்டும் சீனா படைகளை குவிப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் ஆற்று பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய படைகளுக்கும் சீன படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 35 முதல் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த…

மேலும்...

இந்திய தாக்குதலில் சீன படையினர் உயிரிழந்தது உண்மையா? – சீனா விளக்கம்!

பீஜிங் (25 ஜூன் 2020): இந்திய சீனா மோதலில் இந்திய படையினர் 20 பேர் உயிரிழந்த நிலையில் சீன படையினர் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை சீனா மறுத்துள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 5 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியானது….

மேலும்...

எல்லையில் இந்தியா சினா இரு நாட்டு படைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்!

லடாக் (22 ஜூன் 2020): லடாக் கிழக்கு எல்லையில் இந்தியா சீனா படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு…

மேலும்...

நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (21 ஜூன் 2020): “பிரதமர் நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல்…

மேலும்...

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அப்படி பேசவில்லை- பிரதமர் அலுவலகம் விளக்கம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக திசை திருப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின. தொடர்ந்து, லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி…

மேலும்...

சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை – பிரதமர் மோடி!

புதுடெல்லி (19 ஜூன் 2020): இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய- சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீன…

மேலும்...

இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்பவுள்ளேன் – சீனா எல்லையில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம்!

பாட்னா (17 ஜூன் 2020): சீனா இந்தியா இடையேயான மோதலில் உயிரிழந்த வீரர் அமன்குமார் சிங்கின் தம்பியையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பவுள்ளதாக அமனின் தந்தை தெரிவித்துள்ளார். பீகார் சமஸ்திபூர் மாவட்டத்தில் மொஹியுதீன் நகரில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமன் குமார். இவர் ஜூன் 15 ஆம் தேதி இரவு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களுக்கும் சீன இராணுவத்தின் (பி.எல்.ஏ) படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிர் இழந்தார். அமன் குமாருக்கு மனைவி மினு தேவி, தந்தை…

மேலும்...

இந்திய சீன எல்லை மோதல் – மேலும் நான்கு இந்திய வீரர்கள் கவலைக்கிடம்!

லடாக் (17 ஜூன் 2020): லடாக் இந்திய சீன ராணுவ வீரகளுக்கிடையேயான மோதலில் காயமடைந்த மேலும் நான்கு வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தியா தரப்பில் காயமடைந்த மேலும் நான்கு ராணுவ வீரர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக…

மேலும்...

இந்திய சீன எல்லையில் வீரர்கள் சாவு – பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (17 ஜூன் 2020): லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த…

மேலும்...