எந்த சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் – மாணவிகள் திட்டவட்டம்!

பெங்களூரு (05 பிப் 2022): எந்தச் சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் என்று கர்நாடக கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவிகள் வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவித் துண்டுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைந்து போராட்டம்…

மேலும்...

காவி உடையா ஹிஜாப் உடையா? – பரபரக்கும் கல்லூரி வளாகங்கள் !

பெங்களூரு (03 பிப் 2022): கர்நாடகாவில் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவி உடை அணிந்து வந்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது, இல்லையென்றால் நாங்கள் இதேபோல் காவி துண்டு அணிந்து வருவோம் என்று இந்து மாணவிய, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இதையடுத்து…

மேலும்...

தடையை மீறி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகள்!

உடுப்பி (01 பிப் 2022): கர்நாடகா மாநில அரசுக் கல்லூரியில் தடையை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல முடிவு செய்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மாநில கல்லூரியில் மாணவிகள் வகுப்பு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி (செவ்வாய்கிழமை) உலக ஹிஜாப் தினமாக கொண்டாடப்படுவதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவர்கள் தரப்பில்…

மேலும்...

ஹிஜாப் அணிவதையே விரும்புகிறேன் – மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல மாடல் திடீர் அறிவிப்பு!

நியூயார்க் (27 நவ 2020): இஸ்லாமிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றும் விதமாக மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க மாடல் ஹலீமா ஏடன் அறிவித்துள்ளார். ஃபேஷன் உலகில் கொடி கட்டிப் பறந்தவர் 23 வயதான அமெரிக்க மாடலான ஹலீமா ஏடன். இவர் ஹிஜாப் அணிந்து, கன்யே வெஸ்டின் யீஸி உள்ளிட்ட முக்கிய பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் தற்போது ஹிஜாப் அணிந்து மாடல் உலகில் தொடர்வது நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறி, மாடல் உலகிலிருந்து விலகுவதாக அவர்…

மேலும்...

பீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை!

பாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி பெண்கள் கல்லூரி உள்ளது. அங்கு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு அறிவிப்பு வெளியானதால், மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிவிப்பில், “முஸ்லிம் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது!” என்றும் “மீறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்!” எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...