அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் தகவலுக்கு மற்றவர்கள் எம்பியை கேலி செய்ய முன்வந்ததால் அவர் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் காலிக். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மெஸ்ஸி…

மேலும்...

பாஜக மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவிய முதல்வர்!

திஸ்பூர் (08 அக் 2022): அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜக மூத்த தலைவர் ஒருவரின் கால்களைக் கழுவிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, பெரியவர்களுக்கு மரியாதை செய்வது பாஜகவின் பாரம்பரியத்தின் அடித்தளம் என்றும், மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவியதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். கவுகாத்தியில் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

மேலும்...

அஸ்ஸாமில் ஒரே மாதத்தில் மூன்று மதரஸாக்கள் இடிப்பு!

போங்கைகான் (31 ஆக 2022) அசாம் மாநிலத்தில் “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து , போங்கைகான் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவை இடிக்க அசாம் அரசு புதன்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது. மார்கசூல் மஆரிஃப் குவாரியானா மதரஸா வளாகம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அடுத்து அந்த மதரசாவை இடிக்க அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மதர்ஸாவை பிடிப்பதற்காக செவ்வாயன்று, அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 224 மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்….

மேலும்...

முன்னாள் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடம்!

கவுஹாத்தி (01 செப் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அசாம் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய்(85) உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிக்கப்பட்ட தருண் கோகாய் கவுஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதனால் தருண் கோகாய்-க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இந்த தகவலை…

மேலும்...

தொடங்கும் விமான போக்குவரத்து – மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் அஸ்ஸாம் மாநில பாஜக அரசு!

புதுடெல்லி (22 மே 2020): உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில் அஸ்ஸாம் வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அஸ்ஸாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கிக் கிடக்கும் விமான சேவையானது, வரும் மே 25 முதல் மீண்டும் தொடங்க உள்ளது. ஆனால் அ “சிறிய நேரம் கொண்ட பயணங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இருக்காது. இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். உள்ளூர் விமானங்கள் மூலம் வருபவர்களை 14…

மேலும்...

அஸ்ஸாமில் மதரஸா மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அரசு முடிவு!

கவுஹாத்தி (13 பிப் 2020): அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்ள 614 மதரஸாக்களையும், 101 சமஸ்கிருத பள்ளிகளையும் மூடவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “அரபி மதரஸாக்களில் பயில்வோர்கள் அரசு வேலைக்கு…

மேலும்...

குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயம் – உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (12 பிப் 2020): அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயமாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அசாம் இறுதி குடிமக்கள் பட்டியலின் தரவுகள் மாநில இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளன. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,சில தொழில்நுட்ப கோளாறு காரணாமக கிளவுடில் அது தென்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில்…

மேலும்...

அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு!

கவுஹாத்தி (08 பிப் 2020): அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி. என்பிஆர் உள்ளிட்ட விவகாரங்கள் நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஸ்ஸாமில் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருப்பவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களை விடுவிக்க அஸ்ஸாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி முஸ்லிம்கள் தடுப்பு…

மேலும்...

NRC-யை அமல்படுத்தும் எண்ணம் இல்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்!

புதுடெல்லி (04 பிப் 2020): நாடு முழுவதும் என்.ஆர்.சியை இப்போதைக்கு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதுல் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிக்கு தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக…

மேலும்...

குடியரசு தினத்தில் பயங்கரம் – ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு!

கவுஹாத்தி (26 ஜன 2020): இந்தியாவின் குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அஸ்ஸாமின் திபுர்காரில் 2 இடங்களிலும், சோனரி, துலியாஜன் மற்ரும் தூம்தூமா ஆகிய இடங்களிலும் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநில போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கண்டன பதிவில், “குண்டு வெடிப்புச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் தீவிரவாதக் குழுக்களை…

மேலும்...