இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள், பள்ளிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இந்துத்துவா அமைப்புகள் மற்றும் குருபா சமூக அமைப்புகள் நடத்திய ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை…

மேலும்...

ஹலால் உணவுக்கு எதிராக வீடு வீடாக சென்று இந்துத்துவாவினர் பிரச்சாரம்!

பெங்களூரு (20 அக் 2022): தீபாவளி பண்டிகையின் போது ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது என்று இந்துத்துவாவினர் வீடு வீடாக பிரச்சாரத்தை தொடங்கினர். மேலும் எல்லோருக்கும் ‘ஹலால் ஜிஹாத்’ கையேட்டை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்து ஜன ஜாக்ருதி சமிதி, ஸ்ரீராம சேனா, ராஷ்ட்ர ரக்ஷனா படே மற்றும் விஸ்வ ஹிந்து சனாதன பரிஷத் ஆகிய அமைப்புகள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு (ஏபிஎம்சி) வர்த்தகர்களுடன்…

மேலும்...

முஸ்லிம் மதரஸாவில் நுழைந்து பூஜை நடத்திய இந்துத்துவா கும்பல் -வீடியோ!

பெங்களூரு (07 அக் 2022): கர்நாடக மாநிலம் பிதாரில் தசரா கொண்டாட்டத்தின் போது வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூத் கவான் மதரஸா வளாகத்திற்குள் புகுந்த இந்துத்துவா கும்பல் பூஜை நடத்தியுள்ளது. 1460 களில் கட்டப்பட்ட இந்த மதரஸா இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் மதரஸாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த மதரஸாவில் நுழைந்த கும்பல் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில்…

மேலும்...

மதுரா வாரணாசியை அடுத்து இந்துத்துவாவினர் குறிவைக்கும் இன்னொரு மசூதி!

பதாவுன்(17 செப் 2022): உத்திர பிரதேசம் பதாவுன் ஜும்மா மசூதி முன்பு நீல்காந்த் மகாதேவா கோவிலாக இருந்தது என்று இந்துத்துவா சிந்தனையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில அழைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் முகேஷ் படேல் என்பவர் , பதாவுனில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பதாவுனில் உள்ள ஜும்மா மசூதி வளாகம் ஒரு காலத்தில் இந்து மன்னர் மகிபாலின் கோட்டையாக இருந்ததாகவும், இந்த மசூதி, முஸ்லீம் ஆட்சியாளர்…

மேலும்...

மஹாவீர் அகாரா பேரணியில் முஸ்லிம்கள் வீடுகள், மசூதிகள் மீது குறிவைத்து தாக்குதல்!

பாட்னா (11 செப் 2022): பிகாரில் மஹாவீர் அகாரா பேரணியின் போது இந்துத்துவா வன்முறை கும்பலால் முஸ்லிம்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன. பீகாரின் சிவான் மாவட்டம் பர்ஹாரியாவில் நடந்த மஹாவீர் அகாரா பேரணியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வன்முறையின்போது முஸ்லிம்கள் வீடுகள், மற்றும் மசூதிகள் மீது வன்முறையாளர்கள் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் . மேலும் பல வீடுகளில் கொள்ளை நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் கடைகளும்…

மேலும்...

கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கிலிருந்து இந்துத்துவா குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி!

பெங்களூர் (05 ஜூலை 2022):பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளான நிலையில் அவரது கொலை வழக்கு விசாரணை திங்கள்கிழமை நகரின் கீழ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது. கடந்த செப்டம்பர் 5, 2017 அன்று, பத்திரிக்கையாளரும் ஆர்வலருமான கவுரி லங்கேஷ் தெற்கு பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தின் முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நவீன் குமாருக்கு எதிராக முதல்…

மேலும்...

முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது – இந்துத்துவாவினர் வலியுறுத்தல்!

பெங்களூரு (26 ஏப் 2022): முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் உத்தரவிட்டுள்ளனர். பாஜக ஆளும் கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி, முஸ்லிம் வியாபாரிகள் மீதான உளவியல் தாக்குதல் என தொடரும் பிரச்சனை தற்போது அட்சய திருதியையின் போது கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்துக்களை வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில்,…

மேலும்...

டெல்லி மசூதியை தாக்கி காவிக்கொடி ஏற்றிய இந்துத்துவாவினர் – முஸ்லீம் இளைஞர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் என்ற போர்வையில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தேசிய பாதுகாப்பு (என்எஸ்ஏ) வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு வருடம் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க அனுமதிக்கிறது. சமூக ஊடகங்களில் ஹிந்துத்துவவாதிகள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பகிரங்கமாக காண்பிக்கும் வீடியோக்கள் மற்றும் ஆத்திரமூட்டும்…

மேலும்...

இந்து முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் நிகழ்சிநிரல்: சிவசேனா தாக்கு!

மும்பை (12 ஏப் 2022): பாஜகவின் இந்துத்துவா, சுயநலம் மற்றும் வெற்று என்றும், பாஜகவின் இந்துத்துவவாதிகள்” நாட்டில் பிரிவினைக்கு முந்தைய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. பாஜகவுக்கும் இந்துத்துவாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் பாஜகவிடம் இல்லை என்றும் சிவசேனாவின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மசூதிகளுக்கு வெளியே ‘ஹனுமான் பாடலை இசைப்பதன்…

மேலும்...

எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே அழித்தனர் – முஸ்லிம் வியாபாரி கதறல்!

பெங்களூரு (11 ஏப் 2022): எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே காவி துணி ஏந்திய குழுக்கள் அழித்தனர் என்று முஸ்லிம் பழ வியாபாரி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள நுக்கிகேரி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு பழ வண்டிகளை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை சேதப்படுத்தினர். இரு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீராம்சேனை அமைப்பினர், இஸ்லாமிய வணிகர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற கோவிலை நிர்வகிக்கும் அமைப்பிற்கு காலக்கெடுவை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும்…

மேலும்...