தோல்வியை கொண்டாடி ஆச்சர்யப்படுத்திய திமுக பிரமுகர்!

பரங்கிப்பேட்டை (04 பிப் 2020): தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தோல்வியை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் திமுக பிரமுகர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்…

மேலும்...

திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – அன்பழகன் அதிரடி நடவடிக்கை!

சென்னை (04 பிப் 2020): திமுகவின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாள அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் நியமிக்கப்படுகிறார். தேர்தல் பணிக் குழுச் செயலாளராக இருந்த டி.எம். செல்வகணபதி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். மாவட்டப்…

மேலும்...

ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுக தேர்தல்!

சென்னை (22 ஜன 2020): “ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும்!” என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 42…

மேலும்...

திமுக நிர்வாகிகள் மீது ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை (22 ஜன 2020): ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்த நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் குறித்தே கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது. நிர்வாகிகள் பேசி முடிந்த பின்பு இறுதியாக நிா்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியது: வாழ்வா, சாவா…

மேலும்...

மன்னிப்பு அல்லது பதவி நீக்கம் – அடம்பிடிக்கும் திமுக!

சென்னை (17 ஜன 2020): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கோரியுள்ளதாம். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை…

மேலும்...

புலி வாலை பிடித்த கதையானது தமிழக காங்கிரஸின் நிலை!

சென்னை (16 ஜன 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் தற்போது தமிழக காங்கிரஸுக்கு புலிவாலை பிடித்த கதையாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில்…

மேலும்...

திமுக காங்கிரஸ் இடையே விரிசல் – டெல்லியில் பிரதிபலிப்பு!

சென்னை (14 ஜன 2020): திமுக மீது குற்றம் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுக தலைமை ரொம்பவே அப்செட்டாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்தது. இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ்…

மேலும்...

தேர்தல் முடிவுகள் – அதிர்ச்சியில் திமுக!

புதுக்கோட்டை (11 ஜன 2020): மறைமுக தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியில் திமுக தோல்வியடைந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது. மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர் விவரங்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை…

மேலும்...

திமுகவுக்கு எதிராக கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்கள் – முறிகிறதா கூட்டணி?

சென்னை (11 ஜன 2020): திமுக கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டதாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இன்றி மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீா்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த…

மேலும்...

பஞ்சாயத்து தலைவராக வித்தியாசமாக பதவியேற்ற 70 வயது முன்னாள் தலைமை ஆசிரியர்!

கரூர் (10 ஜன 2020): கரூர் அருகே ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் மக்களுக்கு கொடுத்து பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவனை பஞ்சாயத்து தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளவர் எம்.கந்தசாமி, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் 70 வயதிலும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு மக்களே அழைப்பு விட்ட நிலையில், திடீரென்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இருப்பினும் இவருடன்…

மேலும்...