திரைத்துறையினருக்கு இது ஒரு எச்சரிக்கை – ஜவாஹிருல்லா!

சென்னை (19 ஏப் 2022): மனிதநேய மக்கள் கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த, சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்ககக் கோரியிருந்தார். இந்நிலையில் தி.இந்து இதழிற்கு அளித்த பேட்டியில் இது தமிழ் திரையுலகிற்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என தெரிவித்துள்ளார்.. அவரது பேட்டி: ஏன் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்? நான் படத்தைப் பார்க்கவில்லை,…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத பேச்சு – ஆயுதப் படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம்!

புதுடெல்லி (01 ஜன 2022): ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த வகுப்புவாத பேச்சுகளைக் கண்டித்து முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் “வெறுப்பின் பொது வெளிப்பாடுகளுடன் வன்முறையைத் தூண்டுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது, இது உள்நாட்டுப் பாதுகாப்பின் மீறல்களுக்கு வழிவகுக்கும், நமது நாட்டின் சமூக கட்டமைப்பை சீரழித்துவிடும்” என்று முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். நமது எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலையில், தேசத்திற்குள் அமைதி மற்றும்…

மேலும்...

அமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்!

சென்னை (27 அக் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு: மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் வணக்கம். பொருள்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள்…

மேலும்...

சிறையிலிருந்து சசிகலா பரபரப்பு கடிதம்!

சென்னை (20 அக் 2020): சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தங்களுடைய ‘06.10.20’ தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். விவரங்களை அறிந்து கொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ‘கோவிட்’ காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையை அளிக்கிறது. கோவிட் நோய்த் தொற்று பரவலினால் தமிழகத்தில்…

மேலும்...

சூர்யா மீது நடவடிக்கை கூடாது – தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம்!

சென்னை (14 செப் 2020): நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தை நேரிடையாகவே விமர்சித்திருந்தார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறிய நடிகர் சூர்யா மாணவர்களை மட்டும் எப்படி நேரடியாக தேர்வு எழுத உத்தரவிடலாம் என்று கேட்டிருந்தார்….

மேலும்...

நாட்டு மக்களுக்கு மோடியின் கடிதம் சொல்வது என்ன?

புதுடெல்லி (30 மே 2020): நாடு முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.65 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என சக இந்தியர்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.“ இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல்…

மேலும்...

இலங்கை அரசுக்கு எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி கடிதம்!

சென்னை (14 மே 2020): கொரோனாவால் உயிரிழந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எஸ்.டி.பி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இலங்கை அரசுக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு இமெயில் மூலம் விடுத்துள்ள மனுவில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக பரவிவரும் கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்த உலகையே பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில்…

மேலும்...

கொரோனாவை எதிர்கொள்ள சீனாவுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (09 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சீன அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: , கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த…

மேலும்...

முஸ்லிம் மத குருமார்கள் யார்? – ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை சரமாரி பதில்!

சென்னை (06 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினி முஸ்லிம் மதகுருமார்களையும் சாடியிருந்த வேளையில் ரஜினிக்கு முஸ்லிம் மதகுருமார்கள் சரமாரி பதில் அளித்துள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். இந்நிலயில் தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி!

அஹமதாபாத் (09 ஜன 2020): குஜராத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் போஸ்ட் கார்டில் பிரதமருக்கு குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் போஸ்ட் கார்டை கொடுத்து அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை மாணவர்கள் அனைவரும் எழுத வேண்டும் என்றும் இது பயிற்சிதான் என்பதாகவும் பொய்யான வகையில் மாணவர்களை…

மேலும்...