இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!

கத்தார் (12 பிப்ரவரி 2024): இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த எட்டு இந்திய உளவாளிகளை கத்தார் அரசு விடுவித்தது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்த விடுதலையை அளித்தமைக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது. நடந்தது என்ன? கத்தாரில் இயங்கி வரும் நிறுவனம் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் (Dahra Global Technologies & Consultancy Services W.L.L). இது, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கத்தார் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஆலோசனை மற்றும்…

மேலும்...
கத்தாரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் துவக்கம்!

கத்தாரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் துவக்கம்!

தோஹா, கத்தார் (01 பிப்ரவரி 2024):  கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில், பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் ஒன்று எதிர்வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அல் முஜாதிலாஹ் (Al-Mujadilah) எனும் அறக்கட்டளை மூலம் இந்த பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் இயங்கும். இதற்காக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியின் வரவேற்புரையை கத்தார் நாட்டின் ராணி ஷேகா மோஸா பின்த் நாசர் நிகழ்த்தி, பின் வருமாறு உரையாற்றினார். (இந்நேரம்.காம்) “பெண்களுக்கான இந்த பிரத்யேக பள்ளிவாசலில் தொழுகை, வணக்க வழிபாடுகள்…

மேலும்...
கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

தோஹா, கத்தார் (22 ஜனவரி 2024): தோஹா நகரின் சாலைகளில், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த கார் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றி நசுக்கி அழிக்கப்பட்டது. கத்தார் நகர சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “லேண்ட் க்ரூஸர்” கார் டிரைவர் ஒருவர் சாகசங்களைச் செய்தார். இதனை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பின்பு இந்த வீடியோ பல்வேறு சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வந்ததை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, ஸ்டண்ட் செய்த கார்…

மேலும்...
Qatar kite festival to be held from January 25

கத்தாரைக் கலக்கும் காத்தாடி திருவிழா!

தோஹா, கத்தார் (03 ஜனவரி 2023): கத்தார் நாட்டில்  ராட்சத பட்டங்களைப் பறக்கவிடும் காத்தாடி திருவிழா (kite festival) வின் இரண்டாவது பதிப்பு, எதிர்வரும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3, 2024 வரை நடைபெற உள்ளது. இது, பழைய தோஹா துறைமுகத்தில் நடைபெறும். சமீபத்தில் நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழா மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது நினைவிருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி: இந்த காத்தாடி திருவிழா-வில் உலகம் முழுவதிலுமிருந்து 60 பங்கேற்பாளர்கள் இதில் இடம் பெறுகின்றனர். இவர்கள் தயாரித்து…

மேலும்...
வயிற்றுக்குள் மறைத்து போதை மருந்து கடத்தல்

கத்தாரில் வயிற்றுக்குள் மறைத்து ஹெராயின் கடத்தல்!

தோஹா, கத்தார் (25 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவின் ஹாமத் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் தன் வயிற்றுக்குள் மறைத்து ஹெராயின் கடத்தல் செய்ததை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பயணியின் நடவடிக்கை பற்றி சுங்கப் பரிசோதகருக்கு எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, பயணி மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சினிமா பாணியில் ஹெராயின் கடத்தல்: காவல்துறையினர் மேற்பார்வையில், தனியறையில் நடந்த பரிசோதனையின் முடிவில், பயணியின் வயிற்றில் 376 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 107…

மேலும்...
கத்தாரில் பரவும் டெங்கு காய்ச்சல்

கத்தாரில் பரவும் டெங்கு காய்ச்சல்!

தோஹா, கத்தார் (23 டிசம்பர் 2023): கத்தாரில் கொசுக்களின் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் குறிப்பிட்ட வகை கொசுக்கள் கத்தாரில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கத்தார் நாட்டில்…

மேலும்...
ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதில் கைது!

ஆன்லைன் சூதாட்டம், மது – கத்தாரில் பலர் கைது! (வீடியோ)

தோஹா, கத்தார் (10 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வில், ஆன்லைன் சூதாட்டம், மது, மற்றும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தோஹாவில் சில இடங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), நேற்று நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தியது. அதிரடி சோதனை இச் சோதனையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆண்களும்…

மேலும்...
கத்தார் விசா எடுப்பது எப்படி?

விசா விதிகள் தளர்த்தப் பட்டதால் கத்தார் பணியாளர்கள் மகிழ்ச்சி!

கத்தார் (04 டிசம்பர் 2023): கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம் (Ministry of Interior). தற்போது, குடும்பக் குடியுரிமை (Family Residency) மற்றும் வருகை (Visit Visa) வுக்கான விதிமுறைகள் தளர்த்தப் பட்டு உள்ளன. இதன்படி, கீழ்க்கண்ட புதிய விதிகளுக்கு உட்பட்டு கத்தாரில் பணிபுரியும் எவரும், தமது குடும்ப உறுப்பினர்களை கத்தாருக்கு அழைக்க இயலும். குடும்பக் குடியுரிமை (Family Residency) க்கான புதிய விதிமுறைகள்: 1- அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச…

மேலும்...

பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

பாலஸ்தீன் (22 நவம்பர் 2023): பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 50 நாட்களாக காஸா- பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் குண்டு மழையை நிறுத்தி பாலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வரும் கத்தார், இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு காஸா பகுதியில் முழுமையாக போர் நிறுத்தப் படுகிறது. தரை வழியாகவோ, வான்…

மேலும்...

இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது. இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தாரின்…

மேலும்...