கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை (03 நவ 2022): தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் அக்டோபர் 6ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு…

மேலும்...

ஹிஜாப் தடையால் தேர்வை புறக்கணித்த கல்லூரி மாணவிகள்!

உடுப்பி (31 மார்ச் 2022): ஹிஜாப் தடை காரணமாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்நிலைப் பல்கலைக் கழகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மார்ச் 15 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றம், பள்ளி கல்லுரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. மேலும் ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாத மத நடைமுறை அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது. கல்வி நிறுவனங்களில் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது….

மேலும்...

ஹிஜாபுக்கு இங்கு அனுமதி உண்டு – மும்பை கல்லூரி விளக்கம்!

மும்பை (10 பிப் 2022): மும்பை கல்லூரி ஒன்றில் ஹிஜாப் தடை என்ற சர்ச்சைக்கு கல்லூரி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ‘ஹிஜாப், குங்காட், தாவணி போன்றவற்றை அணிந்த பெண் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்று மும்பையில் உள்ள ஒரு கல்லூரி தனது விதிமுறைகளில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், விதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாக கூறியுள்ளது. கல்லூரி அறிக்கைகளின்படி, மும்பையின் மாட்டுங்கா பகுதியில் உள்ள எம்எம்பி ஷா கல்லூரியின்…

மேலும்...

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம்…

மேலும்...

கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் ரத்து – முதல்வர் அதிரடிஉத்தரவு!

சென்னை (26 ஆக 2020): கல்லூரிகளில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸானதாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை…

மேலும்...

கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு!

சென்னை (23 ஜூலை 2020): கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், கலை அறிவியல் கல்லூரி முதுகலை படிப்புகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. அதேவேளை மாணவர்களின் அரியர்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும், மாணவர்கள் தங்களது அரியர் பேப்பர்களை, கல்லூரி…

மேலும்...

மாதவிடாய் காலம் – மாணவிகளை தீண்டாமை கொடுமையில் தள்ளிய கல்லூரி!

அஹமதாபாத் (15 பிப் 2020): குஜராத் மாநிலத்தில் மாணவிகளை ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் விடுதி சமையலறை மற்றும் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் மற்ற மாணவிகளுடனும், பேசவோ பழகவோ கூடாது என்றும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில் கல்லூரி விடுதி…

மேலும்...